பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
672 views
*ஸ்ரீ (969) #ஆண்டாள் திருப்பாவை* வேதம் அனைத்துக்கும் வித்து. *திருமாலே* ! நீ, தேவகி என்னும் ஒருத்திக்கு ஓர் இரவில் மகனாய்த் தோன்றி ஒரே இரவிலேயே யசோதை என்னும் வேறு ஒருத்திக்கு மகனாக ஒளித்து வளர்ந்து வரும் காலத்தில், வளர்வதைப் பொருத்துக் கொள்ள இயலாதவன் ஆகிய கம்சன் உன்னைக் கொல்ல வேண்டும் என்னும் தீய செயலை எண்ணிய எண்ணத்தை அழித்து வீணாகும் படி செய்து, கம்சன் வயிற்றில் , நெருப்பாக நின்றாய். நாங்கள் உன்னைத் துதித்து வந்து இருக்கின்றோம். நாங்கள் வேண்டிக் கொள்கின்ற பறையைத் தந்துவிட்டால், தக்க செல்வமும், அடிமைச் செல்வமும் ஆகிய இவைகளைப் பாடி, வீரத்தையும் பாடி மனதில் உண்டாகின்ற வருத்தத்தைப் போக்கிக் கொண்டு மகிழ்வோம். ஸ்ரீஆண்டாள் திருவடிகளே ஶரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏