S.ANTHONY✝️YESUMARY
2.3K views
*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்* ~ ஆசிரியர் அருட்தந்தை மெத்தோடியஸ் பாகம்-6 நிக்கோலாவின்தாயிடம் தொடர்ந்து நடந்ததை கூறுகிறார் பெர்னதெத் அந்த அம்மா “என்னோடு செபமாலை செபித்தார்கள். செபமாலை மணிகள் அவருடைய விரல்களிடையே ஒன்று ஒன்றாக நழுவின. அதை என்னால் விளக்கவே முடியாது..." என்று நடந்தவைகளை அவர்களிடம் விளக்கிச் சொன்னாள். அங்கு நடந்தவைகளையெல்லாம் கேள்விப்பட்டு பதறித் துடித்தபடி நிக்கோலாவின் வீட்டுக்கு ஓடி வந்தாள் பெர்னதெத்தின் தாய், நாற்காலியிலிருந்து பெர்னதெத்தை இழுத்து, “உனக்கு இது என்ன சின்னப் புத்தி? வா வீட்டுக்கு, அடிக்கிற அடியிலே கனவு காண்கிற புத்தி உன் மண்டையை விட்டுப் பறந்து விடும்" என்று பயங்கரமாக அதட்டினாள் லூயிசா நிக்கோலா என்ற இளைஞனின் அம்மா பெர்னதெத்தின் மீது இரக்கப்பட்டு, "மதாம் சூபீரூ, பிள்ளையை ஏசாதேம்மா. அவள் ஒரு சம்மனசு, சம்மனசை அடிக்கலாமா? பாவம்!" என்றாள். பெர்னதெத்தின் தாய் மனம் கசிந்து அழுதாள். என் பிள்ளையை “பைத்தியக்காரி” என்று ஊரெல்லாம் ஏளனம் செய்யுமே என்று கூறி நோயாளியான மகள் பெர்னதெத்தை அணைத்தபடி வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். லூயிசாவின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. சில தினங்கள் கழிந்தன. அன்று வியாழக்கிழமை. இரண்டு பக்தியுள்ள சீமாட்டிகள் பெர்னதெத்துடன் மசாபியேல் குகைக்குச் சென்றனர். குகையில் தோன்றும் அம்மா சொல்லப்போகும் செய்திகளைக் குறித்துக் கொள்ள பேப்பரும் பேனாவும் கொண்டு சென்றார்கள். காட்சி தொடங்கியது. பெர்னதெத் பரவச நிலையை அடைந்தாள். அவள் கையில் பேப்பரையும் பேனாவையும் சீமாட்டிகள் கொடுத்தார்கள். "அம்மா, நீங்கள் எனக்குச் சொல்லப் போவதை பேப்பரில் எழுதும்படி கேட்கிறார்கள்" என்றாள் பெர்னதெத் குகையில் ஒளியின் மத்தியில் நின்ற அந்த அம்மா புன்முறுவல் பூத்தார். பின் பெர்னதெத்திடம் "எதையும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. நான் சொல்பவை அப்படியே உன் மனதில் இருக்கும். உன்னால் மறக்க முடியாது” என்றார்கள். நீண்ட நேரம் பரவச நிலையில் இருந்த பெர்னதெத்துக்கு நிச்சயமாக அந்த அம்மா எவ்வளவோ செய்திகள் சொல்லியிருப்பார்கள். அவைகளையும், அவளுக்குச் சொல்லப்பட்ட இரகசியங்களையும் இறுதி வரை அவள் யாருக்கும் சொல்லாமல் தனக்குள் வைத்துக் கொண்டாள். ஒரு காட்சியில் மக்களிடம் திரும்பி "தபசு! தபசு! தபசு!" என்று உரக்கக் கத்திச் சொன்னாள். மற்றொரு காட்சியில் "பாவிகளுக்காக செபியுங்கள், செபியுங்கள்” என்றாள். பாவிகள் மனந்திருந்தி வாழவும், அவர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக செபித்து, தன்னை ஒரு பலிப் பொருளாக அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அன்னை பெர்னதெத்தைக் கேட்டிருக்கலாம் என நாம் ஊதிக்கலாம். 1858 பெப்ருவரி 11-ம் தேதி முதல் ஜூலை 16 வரை மொத்தம் 18 காட்சிகள் நிகழ்ந்தன. ஒவ்வொரு காட்சியிலும் நடந்ததைப் பற்றி பெர்னதெத் கூறுவதைக் கேட்போம், முதல் காட்சி 1858-ம் ஆண்டு பெப்ருவரி 11-ம் நாள். பெரிய வியாழக்கிழமை. அன்று கடுங்குளிர், மேரி, அந்துவானெத். ஜேன் அபதி, பெர்னதெத் மூவரும் மசாபியேல் குகைக்கு விறகு பொறுக்க வருகிறார்கள். லூர்து நகர் பங்குக் கோவிலிலிருந்து பகல் நேரத்துத் திரிகால மணி ஒலிக்கிறது! வழக்கம் போல் அந்த இடத்திலேயே நின்று திரிகால செபத்தை செபித்தாள் பெர்னதெத். அவளே நடந்ததைச் சுருக்கமாகக் கூறுகிறாள்: "குகையினுள்ளிருந்து தங்க நிறமான மேகம் முன் வந்தது. சில வினாடிகளுக்குள் இளமையும் அழகம் நிறைந்த ஒரு மாது தோன்றினார். அவர் வலது கை மணிக்கட்டுக்குக் கீழே செபமாலை தொங்கியது. என் சட்டைப் பைக்குள்ளிருந்து என் செபமாலையை எடுத்தேன், இருவரும் செபமாலை செபித்தோம். செபம் முடிந்ததும் அருகில் வரும்படி சைகை காட்டினார்கள். ஆனால் ஒன்றும் பேசவில்லை. மேகத்துடன் குகைக்குள் மறைந்து விட்டார்கள்." தொடர்ந்து இனைந்திருங்கள்..... ஆமென். #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்