broken heart 💔💔
550 views
#😊எனது முதல் பதிவு🤙🏼 நான் எதிர்பார்க்கும் தேர்தல் வாக்குறுதிகள் : 1. அரசு ஊழியர் கையூட்டு வாங்கினால் பணிநீக்கம் 2. மக்கள் பிரதிநிதிகள் (கவுன்சிலர் to CM வரை), அரசு ஒப்பந்ததாரர்கள் ஊழல் செய்தால் சொத்துகள் பறிமுதல் 3. ஐந்து ஆண்டுகளுக்கு உழைக்கும் வகையில் தரமான சாலை அமைப்போம். அமைத்த சாலையை மீண்டும் மீண்டும் தோண்ட மாட்டோம். 4. அனைத்துச் சாலைகளிலும் நடைபாதை அமைப்போம் 5. நடைபாதையில் யாரும் கடை போட அனுமதி கிடையாது. வியாபாரிகளுக்குத் தனி இடம் ஒதுக்கித் தருவோம். 6. மின்தளவடங்கள், பிற கேபிள்கள் அனைத்தையும் நடைபாதை அடியிலேயே அமைப்போம். 7. வீட்டுக்கு வீடு தூய்மையான குடிநீர் வழங்குவோம் 8. தமிழ்நாட்டில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்குவோம். 8. தமிழ்நாடு முழுவதும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்துவோம். 10. சாலைகளில் சிலைகள், பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்க மாட்டோம் 11. குப்பைகள் சேகரித்தல், வகை பிரித்தல், மறு சுழற்சி செய்தலுக்கு நவீன திட்டம். குப்பை மறு சுழற்சி மையத்தைச் சுற்றிலும் அதே வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், காவல் நிலையம், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அனைத்தையும் அமைப்போம். 12. கொசுக்களை ஒழிக்கத் தனிப்படை அமைப்போம். ஒவ்வோர் ஊரிலும் தெரு நாய்களுக்குத் தனி வளாகம் ஏற்படுத்தப்படும். 13. அரசுப் பணியாளர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் இணைய வழி மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். இவர்களின் செயல்பாடுகளை மக்கள் அன்றாடம் மதிப்பிடுவார்கள். உண்மைத்தன்மையை ஆராய்ந்து இவற்றின் அடிப்படையில் பலன்கள் விடுவிக்கப்படும். 14. அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், பொது வெளிகள் அனைத்திலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இவை தொடர்ந்து இயங்குவது உறுதி செய்யப்படும். 15. தமிழ்நாட்டில் கல்வி அறக்கட்டளைகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும். அங்குக் கல்விக் கட்டணம் சீரமைக்கப்படும். மக்கள் விரும்பும் பாடத்திட்டத்தில் கல்வி கற்பிக்கப்படும். 16. தமிழ்நாட்டில் ஆர்வமுள்ள, வேலையற்ற இளைஞர்களுக்கு ஆளுக்கு 10 சென்ட் விவசாய நிலம் குத்தகைக்கு வழங்கப்படும். அதன் விளைச்சலை அரசே வாங்கிக் கொள்ளும். 20 ஆண்டுகள் தொடர்ந்து லாபம் ஈட்டினால் அந்த நிலம் அவர்களுக்கே உரிமையாக்கப்படும். 17. சமூகச் சிக்கல்களை களையும் வகையில் புத்தாக்கம் செய்பவர்கள் பெயரில் புதிய தெருக்கள், ஊர்கள் உருவாக்கப்படும். அவர்கள் ஒருநாள் நகரத் தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள். 18. மூத்த குடிமக்கள் செய்யும் முதலீடுகளுக்கு 10% வட்டி வழங்கும் வகையில் அரசுத் திட்டம் அறிவிக்கப்படும். இந்த நிதியை மேலாண்மை செய்து லாபம் ஈட்ட, வல்லுனர் குழு அமைக்கப்படும். 19. அரசு மதுபானம் விற்பது தடை செய்யப்பட்டு, விவசாயிகள் கள் இறக்க அனுமதி வழங்கப்படும். 20. அரசு புறம்போக்கு நிலங்களை குளமாக உருவாக்கப்பட்டு மழைநீரும், ஆற்றின் உபரிநீரும் தேக்கி நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்படும். 21. நிலங்களை ப்ளாட் போட்டு விற்பனை செய்ய விரும்புவோர், ஏக்கருக்கு 10 சென்ட் வீதம் நிலம் ஒதுக்கி குட்டை உருவாக்கி அரசிடம் ஒப்படைத்தால் மட்டுமே DTCP அனுமதி வழங்கப்படும். 22. சாலை ஓரங்களிலும், ஏரி, குளம், குட்டை ஓரங்களிலும் பலவகையான பழ மரங்கள் நட்டு வளர்ப்பது கட்டாயமாக்கப்படும். 23. பள்ளி, கல்லூரி & அரசு பணிகளில் சாதி, மத அடிப்படையிலான சலுகைகள், இட ஒதுக்கீடுகள் முற்றிலுமாக நீக்கப்படும். 24. அரசு வேலையில் & மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் அனைவரின் குழந்தைகளும் அரசு பள்ளியில் தான் பயில வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். 25. 60 வயதுக்கு மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட தடை. 26. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கட்டாயமாக பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 27. மக்கள் பிரதிநிதியாக தேர்வான ஒருவர் 2 முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட தடை. இது மாதிரி உங்களுக்கும் ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்க... 🙏