🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁புரிகாட்டும் புன்சடையின் மீது திங்கள்_
_🍁பூங்கொன்றை மதமத்தம் சூடி னானும்_
_🍁வரிகாட்டும் அரவத்தை அரையில் நாணா_
_🍁மகிழ்ந்தானும் மார்பில்வெண் ணூலி னானும்_
_🍁எரிகாட்டும் கண்ணேந்து நெற்றி யானும்_
_🍁இரவினிலே பூதங்கள் முழவம் ஆர்க்கக்_
_🍁கரிகாட்டில் திருநட்டம் ஆடி னானும்_
_🍁கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_சுருண்ட செஞ்சடைமேல் பிறை, கொன்றைமலர், ஊமத்தமலர் இவற்றை அணிந்தவனும் !! வரிகளையுடைய பாம்பை அரைநாணாக விரும்பியவனும் !! திருமார்பில் வெண்மையான பூணூல் அணிந்தவனும் !! நெற்றிக்கண்ணில் தீயை உடையவனும் !! இருளில் பூதங்கள் முழவுகளை ஒலிக்கச் சுடுகாட்டில் திருக்கூத்து ஆடியவனும் !! திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️
_*🪷🦜🪷 வாழ்க்கையில் பிடித்தது எல்லாமே கிடைப்பதும் இல்லை. கிடைத்த எல்லாவற்றையும் பிடித்தது போல் மாற்றவும் முடிவதில்லை. ஆனாலும் வாழ்கிறோம். ஆயுள் முடியும் வரை வாழவேண்டும் என்பதற்காக.🪷*_
_*🪷🦜🪷 சந்தோஷத்தில் வாழ்கிறோம் என்பதை விட, நாம் எல்லாவற்றையும் எதுவும் நடக்காதது போல் சமாளித்துக் கொண்டு வாழ்கிறோம் என்பதே நிசப்தமான உண்மையாகும்.🪷*_
_*🪷🦜🪷 எவ்வளவு தான் உங்களோடு இருப்பவர்களுக்காக நீங்கள் அனுசரித்து வாழ்ந்தாலும், சில தருணங்களில் நீங்கள் உங்களுக்காக வாழ்ந்திருக்கலாம் என்ற விரக்தியை, அவர்களே உங்களுக்கு புகுத்தி விடுகிறார்கள்.🪷*_
_*🪷🦜🪷 பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி. சற்றே விலக்கி வையுங்கள். ஓய்வெடுங்கள். நிதானமாக யோசியுங்கள், பின்னர் செயல்படுங்கள். எல்லாம் சுபமாக முடியும். நிதானம் ஒன்றே உங்களை நல்வழிக்கு கொண்டு செல்லும்.🪷*_
_*🪷🦜🪷 அனைவருக்கும். செவ்வாய் - பகவான் அருளுடன் கூடிய இனிய செவ்வாய்க்கிழமை காலை வணக்கங்கள் பல.🪷*_
_*🪷🦜🪷 இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.🪷*_
_*🪷🦜🪷 தங்களைச் சார்ந்த அனைவரும் அவரவர் குலதெய்வத்தின் அருளுடன் கூடிய சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.🪷*_
☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷
#😂கல்யாண மீம்ஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂