Newschannel39
516 views
"ஸ்டாலினின் 'வடசென்னை வளர்ச்சித் திட்டம்' இதுதானா? -" *"கமிஷன்... கலெக்ஷன்... கரப்ஷன்!" - "தோண்டப்பட்ட சாலைகள்... முடங்கிய வாழ்வாதாரம்.."* "தனியார் நிறுவனங்களுக்குப் பாதபூஜை... மக்களுக்குப் படுகுழியா? -" ஆர்.கே.நகரில் திமுகவை கிழித்து தொங்கவிட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்! சென்னை, பிப்.02:- ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்து, கமிஷன் மற்றும் கலெக்ஷனில் மட்டுமே திமுகவினர் ஆர்வம் காட்டுவதாக அதிமுக வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆர்.கே.நகர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட 38-வது வட்டம், நேதாஜி நகர் ஐந்தாவது தெருவில் பல நாட்களாகத் தோண்டப்பட்டு, சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை ஆர்.எஸ். ராஜேஷ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தங்கள் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து அவரிடம் முறையிட்டனர். அப்போது மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசிய போது:- இப்பகுதியில் ஏற்கனவே மூன்று முறை புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால், தற்போது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (Private Telecom) இன்டர்நெட் கேபிள்களைப் புதைப்பதற்காகச் சென்னை மாநகராட்சியின் அனுமதியுடன் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. "தேர்தல் நெருங்கும் வேளையில் கூட மக்கள் பணிகளுக்கு மதிப்பளிக்காமல், கமிஷன் பணிகளில் மட்டுமே திமுக மண்டல குழுத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினரும் முன்னுரிமை அளிக்கிறார்கள்" "மக்களின் சிரமத்தைப் பார்த்து முதல்வர் ரசிக்கிறாரா?:" பல நாட்களாகச் சாலைகள் தோண்டப்பட்டு, மக்கள் நடக்கக் கூட வழியின்றி அவதிப்படுகின்றனர். "மக்களின் இந்தத் துயரத்தை முதல்வர் ஸ்டாலின் ரசித்துக் கொண்டிருக்கிறாரா?" இதுதான் திமுக அரசு கூறும் 'வடசென்னை வளர்ச்சித் திட்டமா?' (Vada Chennai Valarchi Thittam) என்று கேள்வி எழுப்பிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எ.ராஜேஷ் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்கனவே இருக்கும் கட்டமைப்புகளைச் சிதைப்பதே இந்த அரசின் சாதனையாக உள்ளது என்றார். இப்பகுதியில் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், குழந்தைகள், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காக மாநகராட்சி நிர்வாகம் கூட்டுச் சதி செய்து பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாக அவர் தெரிவித்தார். ஆய்வின் முடிவில் "மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நேதாஜி நகர் பகுதியைச் சீரமைக்க வேண்டும். இல்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்" என எச்சரித்தார். இதில் பகுதி செயலாளர் ஆர்.நித்தியானந்தம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முத்து செல்வம்,, பகுதி துணை செயலாளர் எஸ்.சுயம்பு, வட்ட கழக செயலாளர்கள் நரேஷ்குமார், வேல்முருகன், இபி.சேகர், பி.கோவிந்தராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #✍️தமிழ் மன்றம் #💪தி.மு.க