தாய்ப்பாலில் இருந்து திட உணவுக்கு மாறும் ஆறு மாதக் குழந்தைகளுக்கு, அரிசியை விட ராகி மிகச் சிறந்த தேர்வாகும். எலும்பு வளர்ச்சிக்கும் உடல் குளிர்ச்சிக்கும் ராகி ஒரு வரப்பிரசாதம். கோடை காலத்திற்கு ஏற்ற, உடல் சூட்டைத் தணிக்கும் சத்தான ராகி உருண்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள்
உப்பு
செய்முறை:
முதலில் ராகியை நன்றாகக் கழுவி, நீரில் ஊறவைக்கவும். பழைய முறையில், ஊறவைத்த ராகியை அரைத்து பால் எடுத்து கஞ்சியாகக் காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். ஆனால் இந்த உருண்டை செய்முறைக்கு நாம் ராகி மாவை நேரடியாகப் பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக்கொண்டு, அதில் சிறிது உப்பு மற்றும் தண்ணீரைத் தெளித்து, புட்டு மாவு பதத்திற்கு மென்மையாகப் பிசையவும்.
பிசைந்த மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் ஆவியில் நன்கு வேகவைக்கவும். மாவு வெந்ததும் அதன் மணம் உங்களுக்குத் தெரியும். வெந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும். அதனுடன் துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் பொடித்த வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கலந்து, உங்கள் கைகளால் சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி உருண்டைகள் தயார். இந்த ராகி உருண்டை புரதச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்தது. கோடையில் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்க இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமையும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
#🏖️ சம்மர் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🤤குட்டிஸ் சாப்பாடு #👶குழந்தை பராமரிப்பு #ஹெல்த்தி உணவுகள்👨🏽🍳 #🌮சூப்பர் ஸ்நாக்ஸ் ரெசிபி