🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸
*பனித்துளிகள்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸
பூக்கள்
இரவில் கொண்ட
புணர்ச்சியினால்
உருவான
வேர்வைத் துளிகளோ ?
மொட்டுக்கள்
பெரிய மனுஷியானதாள்
குளித்திருக்கிறதோ....?
அட ! புற்களுக்கு
யார் போட்டு விட்டது
வைர அணிகலன்கள்......?
காலை கதிரவனக்கு
விருந்து வைக்க
மரங்கள்
இலைகளுக்குத்
தண்ணீர் தெளித்து
தயாராக வைத்திருக்கிறதோ ?
ஓ......!!!
மரங்களுக்கும்
தமிழர் பண்பாடு
தெரிந்திருக்கிறதோ....?
கதிரவன் வந்ததும்
பனித்துளிகள்
காணாமல் போகிறதே
கதிரவன் என்ன
காவலரா ?
பனித்துளி என்ன
இரவு கள்வர்களா....?
ஏழைகளைப் போல்
இந்தத் தாவரங்களும்
அல்லும்பகலும்
உழைப்பதால் உண்டான
வியர்வை துளிகளோ...?
செடி கொடி
மரங்களின் மீது
இயற்கை எழுதிய
"துளி"ப்பாக்களா....?
ஒரு துளியில்
பெரிதாக என்ன
செய்து விட முடியும் என்று
கேட்டு விடாதீர்கள்....
இந்த பிரபஞ்சமே !
ஒரு துளி
பனித்துளிக்குள்
அடங்கி விடுகிறது....
நிறையப் பூக்களை
பார்த்திருக்கிறேன்
அட ! இது என்ன
நீர் பூக்களா......?
சிற்பிக்குள்
முத்துகள் உருவாகும் என்பார்கள்
பிறகு எப்படி
புற்களில் உருவாகிறது...?
விளம்பரத்தை பார்த்து
இந்த பூக்களும் புற்களும்
முகக்கிரீம்
வாங்கி போட்டது வந்த
முகக்கொப்பளங்களோ ?
பனித்துளிகள்
மரம்
செடி கொடிகளின் கண்ணீர் துளிகளோ..?
- *கவிதை ரசிகன்*
🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷 #💖நீயே என் சந்தோசம்🥰 #😔தனிமை வாழ்க்கை 😓 #💞Feel My Love💖 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏