யாரிடமும் அளவுக்கு மீறி பற்றுக் கொள்ளாதீர்கள்.
யாரையும் பிடித்துக் கொண்டும் வாழாதீர்கள்.
எப்போது வேண்டுமானாலும், எதற்கும் விடை கொடுக்கத் தயாராக இருங்கள்.
வாழ்க்கையோடு சேர்ந்து ஓடுங்கள்.
காரண–விளைவு என்ற வாழ்க்கையின் விதியை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அதை புரிந்து கொள்ளுங்கள்,அதை மீற முயலாதீர்கள்.
பருவங்களைப் போல,
நம் சந்திப்புகளும் நித்தியமானவை அல்ல.
அவை சூழ்நிலைக்கு ஏற்ப
நடக்கும் நிகழ்வுகள் மட்டுமே.
இந்த உலகில்
எதுவும் என்றும் நிலைத்திருக்காது.
எதிலும் தனியாகவும் வலிமையாகவும்
நடக்க கற்றுக்கொள்ளுங்கள்.
இங்கு
வாழ்க்கையின் ஓட்டத்தை ஏற்காதவர்கள்
பொருட்களையும் உறவுகளையும்
விட முடியாமல்
பற்றிக் கொண்டு
வலியில் வாழ்கிறார்கள்.
நீங்கள் எவ்வளவு பற்றிக் கொள்கிறீர்களோ
அவ்வளவு வலியை அனுபவிக்க நேரிடும்.
இன்னும் நீங்கள்
மனிதர்களிடமும் நிகழ்வுகளிடமும்
அடிமையாகாதீர்கள்.
அப்படி இருந்தால்
அவையே உங்களை கட்டுப்படுத்தி
வலியை தரும்.
சுயமாக நிலைத்து நில்லுங்கள்.
நீங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்து முடித்த பின்
எதையும் எதிர்பார்க்காமல்
அமைதியாக விலகிச் செல்லுங்கள்.
வாழ்க்கையில் நீங்கள் தவறு செய்ததாக நினைத்தால்
அதை மீண்டும் சரி செய்ய பிரபஞ்சத்தில்
உங்களுக்கான வாய்ப்புகள்
எப்போதும் இருக்கின்றன.
எனவே
வலிமை, சுதந்திரம், சுயமரியாதையைக்கொண்டே
உங்கள் பாதைக்கான முன்னேற்றத்தை திட்டமிடுங்கள்.
#💖Friday thought 💫 #friday சிந்தனை #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐 #📜தமிழ் Quotes