எலக்ஷன் என்சைக்ளோபீடியா!
‘தன் வாழ்நாள் முழுவதும் திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் விஜயகாந்த். அதனால், விஜயகாந்தும் அவர் உருவாக்கிய தேமுதிகவிற்கும் கொடுமைகளையும் அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று தேமுதிக இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!’ எனச் சொல்லியிருக்கிறது தமிழ்நாடு பாஜக.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக தலைமையில் ஓர் அணி இடம்பெற்றது. அதன் தொகுதிப் பங்கீடு இப்படி அமைந்தது.
தேமுதிக 14
பாஜக-8
பாமக-8
மதிமுக-7
இந்திய ஜனநாயகக் கட்சி -1
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி -1
அந்தத் தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களில் வெற்றி பெற்றது. தர்மபுரியில் அன்புமணியும் கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும் வென்றார்கள். ஆனால், 14 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, பாமக, பாஜக கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது. 11 இடங்களில் டெபாசிட்டையும் தேமுதிக இழந்தது. ’நீ அவல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; ஊதி ஊதித் தின்னலாம்’ எனச் சொல்லி தேமுதிகவின் வாக்குகளை மட்டுமே அறுவடை செய்தவர்கள் பாஜகவினரும் பாமகவினரும்தான். அன்றைக்கு கேப்டனின் முதுகில் குத்தியவர்கள் இன்றைக்கு ஆன்மா பற்றியெல்லாம் பாடம் எடுக்கிறார்கள்.
#அரசியல் #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴