💞 எங்கள் இறைவா!
எங்களின் காலை நேரத்தை நல்லோர்களின் காலை நேரமாகவும்!
எங்களின் மாலை நேரத்தை உன்னை திக்ரு செய்பவர்களின் மாலை நேரமாகவும்!
எங்களின் உள்ளங்களை உன்னை பயப்படுவோரின் உள்ளங்களாகவும்!
எங்களின் சரீரங்களை உனக்கு வழிபடுவோரின் சரீரங்களாகவும்!
எங்களின் அமல்களை முத்தகீன்களுடையா அமல்களாகவும்!
எங்களுடைய நாவுகளை திக்ரு செய்பவர்களின் நாவுகளாகவும்,
ஆக்கியருள்வாயாக!
மேலும் மறதியாளர்களின் தூக்கத்தை விட்டு எங்களை விழிப்படையச் செய்வாயாக!
நல்லோர்களின் துஆவில் எங்களை இணைத்தருள்வாயாகா!
அகிலத்தார்களை இரட்சித்துக் காப்பாற்றுபவனே! சொர்க்கத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக!
எங்களின் தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர், தோழர்கள் அனைவரின் மீதும் எங்களின் மீதும் அல்லாஹ் ஸலவாத்தும் ஸலாமும் பொழிந்திடுவானாகா!
அகில உலகங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானவையாகும்.
ஆமீன்!
ஆமீன்!
ஆமீன்
#📗குர்ஆன் பொன்மொழிகள்