அரிசி ஸ்ரீராம்
541 views
1 days ago
ஒரு கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு தினமும் உப்பு சப்பில்லாத சப்பாத்தியை மூன்று வேளையும் உணவாக தந்தார்கள். கொடுமையை பொறுக்க முடியாத மாணவர்களுக்கு மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கேண்டீன் காண்ட்ராக்ட்காரனிடம் சென்று வேறு உணவு மாற்ற சொல்லி ஒரு சிலர் தவிர பெரும்பான்மையான மாணவர்கள் சண்டையிட்டார்கள். மாணவர்களிடம் அதிக பணம் வாங்கி படுகேவலமான சாப்பாட்டை கொடுத்து கணக்கு வழக்கு இல்லாமல் சம்பாதித்துக் கொண்டிருந்தவன் அடிவற்றில் கலக்கம் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் அவர்கள் கோரிக்கைக்கு சம்மதித்தான். என்ன உணவு மாற்ற வேண்டும் என்பதில் மாணவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தது. அதனால் கேவலமான சப்பாத்திக்கு மாற்றாக எந்த மெனு எனப் போட முடியாமல் தடுமாறினார்கள். அதனால் அவரவருக்கு பிடித்த உணவை ஒரு தாளில் எழுதி பெட்டியில் போட வேண்டும். எந்த உணவிற்கு அதிக வாக்குகள் விழுந்திருக்கிறதோ அந்த உணவிற்கு மெனு மாற்றப்படும் என அறிவித்தான். மாணவர்கள் மகிழ்ச்சி கடலில் குதித்தனர். வாக்குப் பெட்டி கொண்டு வந்து வைக்கப்பட்டது. மாணவர்களிடம் பேப்பரும் பேனாவும் கொடுத்து பிடித்த உணவு பதார்த்தத்தின் பெயரை எழுதி உள்ளே போடச் சொன்னார்கள். மொத்தம் இருந்த 80 மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். முடிவு வந்ததும் உணவு மெனுவில் மாற்றம் வந்துவிடும். பிடித்த உணவை விரும்பி சாப்பிடலாம் என ஆர்வமாக முடிவை எதிர்பார்த்தார்கள். முடிவு அறிவிக்கப்பட்டது. 1) சப்பாத்தி - 20 நபர்கள் 2) இட்லி - 12 நபர்கள் 3) தோசை - 16 நபர்கள் 4) பூரி - 19 நபர்கள் 5) உப்புமா - 5 நபர்கள் 6) வெண்பொங்கல் - 8 நபர்கள் 80 நபர்களில் 60 பேர்களுக்கு சப்பாத்தி பிடிக்கவில்லை என்றாலும்... அதிக வாக்குகள் பெற்றது சப்பாத்தி தான் என்பதால் சப்பாத்தியே மீண்டும் உணவாக வழங்கப்பட்டது. இதே கதை தான் இந்த தேர்தலிலும் வரும் போல் இருக்கிறது. மாற்றம் வேண்டும் என்கின்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. ஆனால் சிங்கம் வேட்டையாடுவதற்கு தோதாக நான்கு பசுமாடுகள் பிரிந்து இருக்கும் பாலர் பள்ளியில் படித்த கதை போல் எதிர்க்கட்சிகள் எல்லாம் பிரிந்து இருக்கின்றன. முடிவில், மீண்டும் சப்பாத்தி தான் நமக்கு கிடைக்கும் போலிருக்கு!! 😭😭😭 #😂HaHaHaHa😅 #🤣சிரிங்க பிளீஸ்😂 #📰தமிழ்நாடு அரசியல்📢 #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 #🚨கற்றது அரசியல் ✌️