S.ANTHONY✝️YESUMARY
723 views
*வியாகுல மாதா* *ஜெபமாலை* 💔🗡️💔🗡️💔🗡️💔🗡️💔🗡️💔 அர்ச். கன்னிமரியம்மாள் தமது திருக் குமாரனின் பாடுகள் நிமித்தமாக அநுபவித்த ஏழு வியாகுலங்களைத் தியானிப்போம். *✝️முதலாம் வியாகுலம்💔🗡️* இந்த முதல் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாளுக்குச் சிமியோன் சொன்ன தீர்க்கதரிசனத்தால் தமது திருக்குமாரனுடைய மரணத்தையும் மனுஷருடைய சேதத்தையும் அறிந்து, அவர்கள் தமது இருதயத்தில் வியாகுல வாளால் ஊடுருவப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. *✝️இரண்டாம் வியாகுலம்💔🗡️* இந்த இரண்டாம் இரகசியத்தில் அர்ச். கஅர் மரியம்மாள் தமது திருக்குமாரனை ஏரோது என்பவன் கொல்லத் தேடுகிறதை அறிந்து, அவரை எடுத்துக் கஅரஅர்கிப்து தேசத்துக்கு ஓடிப்போய் ஏழு வரு­மளவும் மகாதுக்கம் அநுபவித்தார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. *✝️மூன்றாம் வியாகுலம்💔🗡️* இந்த மூன்றாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனோடு தேவாலயத்திற்குப் போனவிடத்தில் மூன்றுநாள் தேடியும் காணாமல் போனபடியினாலே தமது ஆத்துமத்தில் மிகுந்த வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. ✝️நான்காம் வியாகுலம்💔🗡️ இந்த நான்காம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரன் கபால மலையில் மரணமடைய சிலுவை சுமந்து போகையில், அவரை எதிர்கொண்டு மினவினபோது வாக்குக் கெட்டாத வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. *✝️ஐந்தாம் வியாகுலம்💔🗡️* இந்த ஐந்தாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரன் சிலுவையில் அறையுண்டு அவர் சகலராலும் கைவிடப்பட்டு ஓர் ஆறுதலுமில்லாமல் மரணமடைகிறதைக் கண்டு துக்க சாகரத்தில் அமிழ்ந்தி மனோவாக்குக் கெட்டாத வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. *✝️ஆறாம் வியாகுலம்💔🗡️* இந்த ஆறாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனுடைய திருச் சரீரத்தைச் சிலுவையினின்று இறக்கி தமது மடிமேல் வளர்த்தி அதிலுள்ள காயங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் சொல்லக் கூடாத வியாகுலம் அநுபவித்தார்களென்று தியானிப் போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. *✝️ஏழாம் வியாகுலம்💔🗡️* இந்த ஏழாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனுடைய சரீரத்தைக் கல்லறையில் அடக்கம் பண்ணின பின்பு அவரது மரணத்தையும் திருப்பாடுகளையும் தமது தனிமையையும் நினைத்து மட்டில்லாத துயரம் அனுபவித்தார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி. 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை ஜெபிப்போம் ஜெபமாலை ஜெபம் ஜெபிப்பதை நாம் ஒவ்வொருவரும் குடும்பங்களில் கட்டாய ஆக்குவோம்🙏🏻 #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்