News7Tamil
511 views
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது; அந்த வகையில், தென்காசி மாவட்டம் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது; இந்நிகழ்ச்சியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் காவேரிசீனித்துரை, சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்! #Tenkasi | #PalaniNadar | #DMK | #Jayapalan | #ValliMurugan | #TNNews #இன்றையசெய்தி