ஈஸ்வரபட்டர்
340 views
#🙏ஆன்மீகம் ஓர் அறை இருட்டாக இருந்தால் அதை அறிவதோ… “இருட்டு…இருட்டு…” என்று கூப்பாடு போடுவதோ போதாது. அங்கே ஒளியைக் கொண்டு வருவதே நமக்குத் தேவை. 1.காரணம் எதிர்மறையாக இருப்பவைகளை எண்ணிக் கொண்டேயிருந்தால் 2.அது நமக்கு அழிவை உண்டாக்கிவிடும். முதலில் நாம் தெய்வங்களாக ஆவோம். பிறகு… பிறர் தெய்வங்களாக ஆக உதவுவோம். “ஆவதும்… ஆக்குவதும்…” நமது லட்சியமாக இருக்கட்டும். 1.எந்த மனிதனையும் “பாவி…” என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. 2.“தெய்வம்” என்று தான் அவரிடம் சொல்ல வேண்டும். 3.பேய் என்று ஒன்று இருந்தாலும் கடவுளை நினைவில் வைத்துக் கொள்வது தான் நமது கடமையே தவிர 4.பேயை ஞாபகம் வைத்துக் கொள்வது அல்ல…!