Babu Babuji
822 views
1 months ago
2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% அளவுதான் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக இருந்தது இந்தியா. ஆனால், உக்ரைன் - ரஷ்யா யுத்தத்திற்கு பிறகு மேற்கு நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தின.. டாலர் பரிவர்த்தனை, ஏற்றுமதி, இறக்குமதி என முற்று முழுதாக ரஷ்யாவை முடக்கினார்கள். ஆனால், இந்தியா தனது நலனையும், உலக வணிக சுழற்ச்சியையும் மையமாக வைத்து 40% கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்க ஆரம்பித்தது.. இந்திய வரலாற்றிலேயே மத்திய கிழக்கு நாடுகள் இல்லாமல் இன்னொரு நாட்டிடம் இருந்து 40% கச்சா எண்ணெய் வாங்குவது இதுவே முதல்முறை. அதுமட்டுமல்ல, பேரல்களுக்கு குறைவான விலையில் வாங்கியது, இந்திய ரூபாயிலேயே பணத்தை செலுத்தியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டாலும், இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய் சுத்துகரிப்புக்கு பின் பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள் என பல பதங்களில் மாற்றப்படுவதை, இந்தியப் பொருளாகவே நம்மிடமிருந்து பெற்றுக் கொண்டது. இது ஒரு சுழற்ச்சியை தேக்காமல் காக்க உதவியது.. ஆனால், இது ஒரு தற்காலிகம், உக்ரைன் - ரஷ்யா போரினால் மட்டுமே விளைந்த ஒரு ஏற்பாடு. இதை சமயோஜிதமாக பயன்படுத்திக் கொண்டது மோடி அரசின் இணையற்ற சாதனைகளில் ஒன்று. இதனுடைய இணைச் சக்கர விளைவே ஐரோப்பிய யூனியன் - இந்திய அரசின் சமீபத்திய உடன்படிக்கைகளுக்கு ஊக்கமாகவும் அமைந்தன.. நிற்க. அமெரிக்காவை மீறி டாலர் இல்லாமல் நேரடியாக ரஷ்யாவிடம் இவ்வளவு கொள்முதலை சீனாவும் - இந்தியாவும் வர்த்தகம் செய்வதை அமெரிக்கா நித்தியமாக விரும்பும் என்பதை எதிர்பார்க்க முடியாது. இப்போதே தடையை மீறி வாங்குவதாக தான் பொருள். நிச்சயமாக அதை தடுக்கவே எப்போதும் முயல்வார்கள். ஆனால், ரஷ்யாவிடம் வாங்காதே, என்னிடமே வாங்கு என்று உடன்படிக்கைக்கு தான் அமெரிக்கா வருகிறது. இதன் நோக்கமே ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்க வேண்டும் அதே சமயம் அமெரிக்கா அல்லாமல் இந்தியா - சீனா ஆசியாவில் ரஷ்யக் கூட்டுடன் எழக்கூடாது என்ற நோக்கமும் உள்ளது.. அதே சமயம், ரஷ்யா - அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் என மூவரும் சுமூக உடன்படிக்கைக்கு வந்து விட்டால் ரஷ்யா நமக்கு மலிவு விலைக்கு இவ்வளவு கச்சா எண்ணெயை விற்க முன் வராது. இது விரைவில் நடக்கலாம்? ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் சுமூக போக்கும் வரும்.. அப்போது வழக்கம் போல நாம் மத்திய கிழக்கு நாடுகளிலேயே அதிக கொள்முதலை செய்வோம் என்பது எளிய சூத்திரம்.. ஆனால், இவையெல்லாம் நாளில் நடக்காது, தொடர் பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் என பல்வேறு விதமாக நீளும். அமெரிக்காவால் நேரடியாக இந்தியாவை கட்டுப்படுத்தவெல்லாம் முடியாது, சீண்ட முடியும். இந்தியாவுக்கு 30 நாளைக்கு அனுமதி என்று சொல்லும் போதே, அது இந்த போரினால் உலகில் எண்ணெய் தட்டுப்பாடு வரக்கூடாது என்பதால் என்று கூறிவிட்டு, இதனால் ரஷ்யாவிற்க்கு பெரிய லாபமில்லை என்று பதிவு செய்துள்ளது அமெரிக்கா.. அதாவது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பழைய மொழிதான். போரழுத்தம் சரியாகும் வரை அமெரிக்காவின் எந்த அழுத்தமும் இல்லாமல் எண்ணெய்யை இந்தியா வாங்க முற்படும், இது நிலைமையை மெல்ல சீருக்கு கொண்டு வர உதவும்.. ஆனால், காங்கிரஸ் போன்ற நயவஞ்சக எதிர்கட்சிகள் தேசத்துக்கு விரோதமாக அதை பலகீனமாக காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசுகிறார்கள். காங்கிரஸால் இப்படி ஒரு நிலையை எல்லாம் வரலாற்றில் எதிர்கொண்டிருக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய வர்த்தக நிலை, அதன் பலம் இன்று உச்சத்தில் உள்ளது.. ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🙏என் தேசப்பற்று #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #I ❤️‍🔥 Indian Army🦾