AMANLATCHOUMY
708 views
தீராத நோய்களை தீர்க்கும் வைத்திய வீரராகவர் திருக்கோயில் திருவள்ளூரில் அருள் பாலிக்கும் வீரராகவ பெருமாள் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் இத்தலத்து பெருமாள் நோய் வைத்திருக்கும் மருத்துவராக போற்றப்படுகிறார் தொடர்ந்து மூணு அமாவாசைகள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் தீராத வயிற்று வலி கை கால்கள் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம் உடலில் தேவையற்ற மருக்கள் கட்டிகள் இருப்பவர்கள் அவை மறைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிரகாரத்தில் உப்பு மற்றும் மிளகை சமர்ப்பிக்கிறார்கள் உப்பு கரைவது போல் நோய்களும் கரைந்து விடும் என்பது ஐதீகம் மூலவர் வீரராகவபெருமாளுக்கு தண்ணீர் அல்லது பாலில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை சந்தன தைலம் மட்டும் அபிஷேகம் நடைபெறுகிறது இக்கோயிலில் ஹிருதாபதனி தீர்த்தம் கங்கை விட புனிதமாக கருதப்படுகிறது இதில் குளித்தால் மனக்கவலைகள் நீங்கும் என்பது நம்பிக்கை பெருமாளுக்கு விசேஷமான கம்பளி அங்கி காணிக்கை மிகவும் இங்கே பிரபலம் சென்னையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை அமாவாசை நாட்களில் நாள் முழுவதும் நடை திறந்திருக்கும் இந்த வைத்திய வீராகவ வழிபாடு #🙏ஆன்மீகம் சிறப்பு தரும்