சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். "உடல் வன்முறைக்கு இடமில்லை" என கூறி, பார்வதி மற்றும் கம்ருதீனை உடனடியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதையடுத்து, நேற்று பிக்பாஸ் நிர்வாகம் அதிரடி முடிவெடுத்து பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்டு வழங்கியது. இதன் மூலம், இருவரும் உடனடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ரெட் கார்டு வழங்கப்பட்டதால், இதுவரை பிக்பாஸ் வீட்டில் அவர்கள் இருந்த நாட்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு மட்டுமல்லாமல், விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தொடர்பாக நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் இனி இவர்களுக்கு அழைப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.
மேலும், நடிகர் கம்ருதீன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'மகாநதி' என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது அந்த தொடரிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்தளவு உண்மை என தெரியவில்லை. ஆனால் ஒரேயொரு ரெட் கார்டு தீர்ப்பு, பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரின் வாழ்க்கையிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
#👁️BB9: ஜோடியாக ரெட் கார்டு பெற்ற பார்வதி & கம்ருதீன் 🟥 #👁️BB9: கலகலப்பான பிக்பாஸ் வீடு😍 #👁️BB9: இந்த வாரம் வெளியேறுவது இவரா?🧐 #👁️BB9: வரன் தேடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்😮 #👁️BB9: இன்னைக்கு வெளிய போறது இவங்களா?😱