அவன் ஒரு மாபெரும் செல்வந்தன், மது, மங்கை, போதை என்று எல்லாவற்றின் பின்னாலும் அலைந்து பாா்த்தான்.
அவன் வாழ்வில் மகிழ்ச்சியே கிடைக்கவில்லை, துறவறம் மேற்கொண்டால் மன அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும் என்று யாரோ சொல்ல...
தனது வீட்டிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம் என்று அனைத்தையும் ஒரு மூட்டை கட்டிக்கொண்டு ஒரு யோகியின் காலடியில் வைத்துவிட்டு... "ஸ்வாமி இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்கள் காலடியில் வைக்கிறேன்... இனி எனக்கு எதுவும் தேவையில்லை, நான் நாடிவந்திருப்பது மன அமைதி, சந்தோஷம் மட்டுமே" என்று சரணடைந்தான் செல்வந்தன்.
அந்த யோகியோ மூட்டையை அவசரமாக திறந்து பார்த்தாா்.. கண்ணை கூசவைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கம் வைரங்களை மீண்டும் மூட்டையாக சுருட்டி எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். செல்வந்தன் அதிா்ச்சி அடைந்தான், ஒரு போலி சாமியாரிடம் நம் செல்வத்தை ஏமாந்து கொடுத்து விட்டோமே என்ற துக்கம், ஆத்திரமாக மாற....
செல்வந்தன் யோகியைத் துரத்த ஆரம்பித்தான். யோகியின் ஓட்டத்திற்கு செல்வந்தனால் ஈடுகொடுக்க முடியவில்லை. சந்துபொந்துகளில் எல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி, இறுதியில் தான் புறப்பட்ட அதே மரத்தடிக்கே வந்து நின்றாா்.
மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திகொண்டு வந்த செல்வந்தனிடம் யோகி... "என்ன பயந்துவிட்டாயா.? இந்தா உன் செல்வம் நீயே வைத்துக்கொள்" என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்...
கைவிட்டு போன தங்கமும் வைரமும் மீண்டும் கிடைத்ததில் பிடிபடாத சந்தோஷம் செல்வந்தனுக்கு. இங்கு வருவதற்கு முன்பும் கூட இந்தத் தங்கமும் வைரமும் உன்னிடம்தானே இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் மகிழ்ச்சி ஏன் அப்போது இல்லை. மகிழ்ச்சியை தன்னுள்ளே வைத்து கொண்டு மன அமைதிக்காக மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே யோகியின் கூற்று.
#நேற்றைய நிகழ்வுகளை களைந்து, நாளைய சிந்தனையை மறந்து, ஒவ்வொரு விடியலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே தர்மத்தின் சித்தாந்தம்..!
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏