B. CELLIN
587 views
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச் காலை ஜெபம்* "எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறை தோறும் உமது புகழை எடுத்துரைப்போம்". (திருப்பாடல் 79 : 8. 9. 11. 13) மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றவரே! விண்ணகத்தின் வாயில்களைத் திறக்கின்றவரே! வையகத்தின் வளங்களைத் தருகின்றவரே! உம்மை வாழ்த்தி, வணங்கி, போற்றி, துதித்து ஆராதனை செய்கிறோம். மாட்சிமிக்க, அஞ்சுதற்குரிய எங்கள் இறைவனே! நாங்கள் உமது கட்டளைகளை, நியமங்களை, எம் வாழ்வில் பலமுறை மீறினோம். விபரம் தெரிந்த நாள் முதல், இந்நாள்வரை நாங்கள் பாவங்கள் பல செய்தோம். உம் வழி தவறி நடந்தோம். உம் கட்டளைகளையும், நீதி நெறிகளையும் கைவிட்டோம். ஆனால், எங்கள் தலைவரும், கடவுளுமாகிய ஆண்டவரே! உம்மிடத்தில் இரக்கமும், மன்னிப்பும் உண்டு. இரக்கத்தின் இறைவா! நீர் இரக்கமுள்ளவராக இருப்பது போல் நான் நடவாமல், பிறரிடம் இரக்கமற்று இருந்த தருணங்களுக்காகவும், பிறரைத் தீர்ப்பிட்ட தருணங்களுக்காகவும், உம்மிடம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். இறைவா! எனக்கு எதிராக பாவம் செய்தவர்களை, நான் என் மனதார மன்னிக்கின்றேன். அதன் நிமித்தம், என் பாவங்களையும் மன்னியும். ஏனெனில், "மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்" என நீர் கூறி இருக்கின்றீர். இயேசுவே! இத்தவக்காலத்தில் பிறருக்கு எல்லா வகையிலும் உதவ, எனக்கு பெலன் தாரும். "எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்” என்ற உமது இறைவார்த்தை, எப்பொழுதும் என் நினைவில் நிற்பதாக. இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணகத்தில் இருக்கிற... (1) அருள் நிறைந்த... (3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.*