#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
சீரும் கடலலைகளின் பேரிரைச்சல்
கரை மோதும் கோபம்
காதிலேயே விழாதது போன்ற
அமைதியில் கடற்கரை
மனைவியின் பெருங்கோபக் கூச்சல் காதில் வந்து மோதும்
அருகேயே அமைதிகாக்கும் கணவன்
இந்த மௌனம் தான் உறவு நீடிக்க
காரணமாகிறதோ