10ம் வகுப்பு 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு கல்வி தொடர்பான அறிவுரை. :
1. திட்டமிட்டுப் படியுங்கள். தினமும் ஒரு அட்டவணை போட்டுப் படிக்க வேண்டும். கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் தினமும் சிறிது சிறிதாக படிக்க வேண்டும்.
2. படித்ததை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்ப்பது சிறந்த பயிற்சியாகும் . எழுதுவதைப் போன்ற சிறந்த பயிற்சி எதுவும் இல்லை.
3. உங்களின் கல்வி சம்பந்தப்பட்ட சந்தேகங்களை ஆசிரியரிலும் நண்பர்களிடமும் பகிர்ந்து அறிந்து கொள்ளுங்கள்.
4. முக்கியமான பகுதிகளை குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
5. பயம் வேண்டம் . தேர்வு வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. ஆனாலும் அதுவே உங்களை வாழ்நாள் முழுதும் காப்பாற்றும் கவசம்.
6. போதிய தூக்கம் தேவை. அவசியம் குறைந்தது 7 மணி நேரம் தூங்க முயற்சி செய்யுங்கள்.
7. சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள். காய்கறி , பழம், பருப்பு வகைகளை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.
8. ஐஸ்கிரீம், ஜங்க் உணவு, காரம், புளிப்பு, குளிர் பானம் அவசியம் தேர்வு முடியும் வரை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.
9. தினமும் 15 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள் எந்த வித சிந்தனையும் இன்றி நாங்கள் ஜெயிக்க பிறந்தவர்கள் என்ற எண்ணத்துடன்.
10. மொபைல், டிவி, தேவையற்ற சமூத வலைத்தளங்களை அவசியமதவிர்த்து விடுங்கள்.
11. அதிகாலை 4.30 ல் இருந்து 6 மணிவரை படிக்க முன்வாருங்கள். அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமானால், இந்த நேரத்தை பயன் படுத்திக் கொள்ளுங்கள் பாஸ் என்பது ஆறுதல் வாரத்தை மட்டுமே. அதிக மதிப்பெண் என்பது மட்டுமே உங்களை வெற்றிப்பாதையின் உயர்வில் நிறுத்தும்.
12. உங்களுக்குள் சொல்லிக் . என்னால் முடியும் , உயர்ந்த மதிப்பெண் என்னுடைய லட்சியம் என சொல்லிக் கொள்ளுங்கள்.
13. முக்கியமான ஒன்று தெய்வ நம்பிக்கை கொள்ளுங்கள். உழைப்பு மட்டும் முக்யம் அல்ல பிராத்தனையும் முக்கியம்.
14. மதிப்பெண் முக்கியம் அப்போது தான் மனிதர் மதிப்பு பெற முடியும். உன்னிடம் செல்வம் இல்லாமல் இருக்கலாம் . கல்வி அது போதும் மதிப்பு தானாக வந்தடையும் .
15. அப்துல் கலாம் ஏழைதான். ஆனால் அவரை அடையாளம் காட்டியது அவரது கல்வியும் அவரது கடின உழைப்பும் ,
முயற்ச்சியும் தான்.
தோல்வி என்பது முடிவு அல்ல அது ஒரு தொடக்கம் பெற்றோர்கள் உங்களை அறிவுறுத்துவது மதிப்பெண் கருதி அல்ல உங்களின் உயர்வுக்காகவே உங்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையவே எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் உங்களை நேசிக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். உங்கள் வெற்றி உங்கள் முயற்ச்சியில் தான் உங்கள் மகிழ்ச்சி உங்களிடம் மட்டுமே வேறு யாரிடமும் இல்லை. தாய் தந்தையிடம் நிரூபியுங்கள் நான் கல்வியில் சிறந்து வருவேன் என்று. அவர்கள் வாழ்வதற்காக உங்களை படிக்க வைக்கவில்லை. பலன் எதிர்ப்பார்த்தும் இல்லை உங்களின் எதிர்கால நன்மைக்காகவே. தாய் தந்தை பட்ட கஷ்டம் பிள்ளைகள் பட கூடாது என கருதியே புரிந்து கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் மாணவ மணிகளே.
பள்ளி தேர்வு நேரத்தில் பெற்றோர்க்கான அறிவுரை
படிக்க சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டாம் மற்றவர்களுக்காக
புகழுக்காகவும் அவர்களை மிகவும் தொந்தரவு செய்ய வேண்டாம்.
தேர்வு சமயத்தில் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் தரும். அவர்களை உற்சாகப்படுத்துங்க அவர்களுக்கு தேர்வு நேரத்தில் வீட்டு பணிகளை சுமத்தாதீர்கள். மற்ற மாணவ மாணவிகளுடன் ஒப்பிட்டு பேசுவது அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கும். ஒவ்வொரு குழந்தையும் தனித்திறமை கொண்டவர்கள்.
அமைதியான சூழல் உருவாக்குங்கள்
வீட்டில் சண்டை, சத்தம் இல்லாமல் அமைதியான சூழலை ஏற்படுத்துங்கள். அடுத்தவர்கள் வாழ்க்கை பற்றி அவர்கள் முன் வாதாடாதீர்கள்.
உணவு & தூக்கம் கவனிக்கவும்.
சத்தான உணவு, நேரமான தூக்கம் ஆகியவற்றை கவனியுங்கள். இரவு முழுவதும் விழித்து படிக்க ஊக்குவிக்க வேண்டாம். அதிகாலை நேரம் அவர்கள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள். உற்சாக மூட்டுங்கள் சூடான பால் தேநீர் போன்றவற்றை அளியுங்கள்.
அன்பாக பேசுங்கள்
தினமும் சில நிமிடங்கள் குழந்தைகளுடன் அமைதியாக பேசுங்கள். அவர்களின் பயம், கவலை ஆகியவற்றை கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.
தோல்வியை பயமுறுத்த வேண்டாம்
“தோற்றால் என்ன ஆகும்?” என்று பயமுறுத்தாமல், “தோல்வி வந்தாலும் நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்” என்று நம்பிக்கை அளியுங்கள்.
மொபைல் கட்டுப்பாடு வேண்டும் அதை
முற்றிலும் கோபமாக சொல்லாமல் காரணம் சொல்லி புரிய வையுங்கள். நீங்களும் பிள்ளைகளின் நலன் கருதி தேர்வு முடியும வரை தொலைபேசி மற்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ரத்து செய்யுங்கள். நமக்காக நம்மை பெற்றவர்களும் தியாகம் செய்கிறார்கள் என்ற உள்ளுணர்வு அவர்களுக்கு புத்துணர்ச்சியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். அவர்களுக்காக
பிரார்த்தனை செய்யுங்கள்.
மதிப்பெண் மட்டுமே இலக்கு அல்ல
மதிப்பெண் முக்கியம், ஆனால் அதைவிட முக்கியம் குழந்தையின் மனநலம் மற்றும் தன்னம்பிக்கை முக்கியம்.
நம்பிக்கை வார்த்தைகள் சொல்லுங்கள்.
“நாங்கள் உன்னை நம்புகிறோம்” – இந்த ஒரு வார்த்தை குழந்தைகளுக்கு மிகப் பெரிய பலம். மதிய நேரம் படிக்க வேண்டிய நேரம் இல்லை மனதிலும் அவர்களுக்கு பதியாது. ஓய்வு எடுக்க சொல்லுங்கள். நேரம் உள்ள போது ஆலயம் அழைத்து செல்லுங்கள் . வெற்றியும் தோல்வியும் சமமாக பாவிக்க எடுத்துறையுங்கள். பிள்ளைகளின் கல்வியில் தேர்ச்சி அவர்களிடம் மட்டும் இல்லை நம்மிடமும் உள்ளது .
ஜெய் ஹிந்!
வெற்றி நமதே.
#தேர்வு
...... Savithri Raju