Fahmi
557 views
விஜய்களை ஹீரோக்களாக பார்க்கும் இதே நாட்டில்தான் உண்மையான ஹீரோக்கள் சத்தம் இல்லாமல் சாதனைகளை புரிந்து விட்டு அமைதி ஆகி விடுகிறார்கள். ஆனால், அவர்கள் செய்யும் செயல்களை இந்தியாவே கொண்டாடுகிறது. #மனிதநேயம் #மனிதநேயம் #மனிதநேயம் #மனிதநேயம் உத்தரகண்ட் மாநிலம் கோட்வாரை சேர்ந்த ஜிம் உரிமையாளர் / பயிற்சியாளர் தீபக் குமார். ஒரு 70 வயது முதிய முஸ்லீம் கடைக்காரரையும், சில காஷ்மீரி ஷால் விற்பனையாளர்களையும் பஜ்ரங் தள் மற்றும் இதர ஹிந்துத்துவா குண்டர்கள் துன்புறுத்தி கொண்டே இருந்தனர். முதியவரின் கடை பெயரில் பாபா என்று எழுதப்பட்டு இருந்ததை மரியாதையாக நீக்கி விடு என்று மிரட்டி கொண்டு இருந்தார்கள். மத ரீதியாக துன்புறுத்தி கொண்டே இருந்தார்கள். தீபக் குமார் இதை பார்த்து விட்டு தைரியமாகத் தலையிட்டு, அவர்களை விரட்டி அடித்து விட்டு, முதியவரை காப்பாற்றினார். . பஜ்ரங் தள் குண்டர்கள் உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு, "முகமது தீபக்" என்று சொல்லி இருக்கிறார். தீபக் உண்மையில் ஒரு ஹிந்து. ஆனால், தன் பெயரை முகமது தீபக் என்று சொன்னதால் குழம்பி போனார்கள் அந்த மத வெறியர்கள். இந்த விவகாரம் எல்லா சமூக ஊடகங்களிலும் பயங்கரமாக வைரல் ஆக இந்தியாவே தீபக்கை பாராட்டி ஹேஷ்டேக்லாம் போட்டு பாராட்டியது. போதாதற்கு தீபக் போன்ற ஹீரோக்கள்தான் இந்தியாவிற்கு அதிகம் தேவை என்று ராகுல் காந்தியும் டிவிட் போட, ஆத்திரம் அடைந்த பஜ்ரங் தள் குண்டர்கள் குடியரசு தினத்தன்று தீபக் வீட்டின் முன் வன்முறை செய்ய குவிந்தனர். கதவை திறந்து ஜிம் பாடியை காட்டிய படி, கையில் உருட்டுக் கட்டையுடன் தீபக் வெளியே வர அலறி அடித்து ஓட்டம் பிடித்தது ஹிந்து வெறியர்கள் கூட்டம். கொலை மிரட்டல்களையும் விடுத்தார்கள். இப்போது கோட்வார் ஊரே ஒன்று திரண்டு மத சார்பின்மையை வலியுறுத்தி போராடிய தீபக் குமார் பின்னால் நிற்கிறது. ஊருக்கு ஒரு தீபக் குமார் தோன்றினால், இந்தியாவில் வெறுப்பு அரசியலை விரட்டி விடலாமென்று ராகுல் காந்தி வலியுறுத்தி இருக்கிறார். பொது மக்களும் லட்சக்கணக்கில் இந்த "முகமது தீபக்"கை பாராட்டி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்!

More like this