#AjitDoval
#ISROVisit
இந்த புகைப்படம் வைரலானது உங்கள் அனைவருக்கும் தெரியும். நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதன் பின்னால் உள்ள விவரங்கள் எதுவும் பெரிய அளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது வெளியே வரவும் வராது. ஆனால் அரசல் புரசலாக சில விவரங்கள் கசிந்துள்ளன.
January 21 2026
டெல்லி விமான நிலையத்தின் சாதாரண இண்டிகோ பேசஞ்சர் விமானம், நள்ளிரவில், 4 பேர் சாதாரண உடையில், சாதாரண பயணிகளாக உள்ளே வருகின்றனர். ஒரு சிலரை தவிர வேறு யாருக்கும் அவர்கள் யாரென தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தாலும் சைகையால் அமைதி காக்கிறார்கள். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கிய பின்னர் அவர்கள் காற்றோடு மறைந்து விடுகிறார்கள்.
அடுத்த நாள் காலை 7 மணி அளவில், தும்பாவில் உள்ள Vikram Sarabhai Space Centre (VSSC) உள்ளே நுழைகின்றனர். விசாரணைகள் ஆரம்பம். இடையில் எதிரில் உள்ள கேரளா சிப்ஸிக்கு திடீரென அவர் செல்கிறார். இதற்குள் கேரள போலீசார் அலர்ட்டாகி, பாதுகாப்பு பணியில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர்.
22, 23 இரண்டு நாள் VSSC தவிர்த்து, அந்த பகுதியில் உள்ள பலரிடம் விசாரணை நடக்கிறது. யாருக்கும் எதற்கு என்று புரியவில்லை. எல்லாம் முடிந்து ஸ்பெஷல் சார்டட் விமானத்தில் டில்லி திரும்புகிறார். பல யூகங்கள் இங்கும் அங்கும்.
என்ன நடந்தது? எதற்கு விசாரணை? அதுவும் டோவல்ஜி நேரிடையாக செல்ல வேண்டிய அவசியம் என்ன?
PSLV ராக்கெட் முழுமையான பிறகு, பல வெற்றிகரமான ஏவுதல்கள், (92.8%) உலகமே மிகக் குறைந்த விலையில், வெற்றிகரமாக விண்கலம் ஏவ மிகவும் நம்பிக்கையாக அணுகும் நிறுவனமாக ISRO மாறிக் கொண்டிருந்தது. விண்கலம் ஏவி, சரியாக நிறுவுவதில் பெரும் சாதனைகள் படைத்தன.
May 2025 - ES 09 Radar உடன் செலுத்தப்பட்ட PSLV தோல்வி
Jan 2026 - E0S N1 DRDOவின் Surveillance Satellite மற்றும் 15 வேறு சாட்டிலைட்டுகளுடன் செலுத்தப்பட்ட PSLV தோல்வி
இதே 2025-26ல் சீனாவின் 6 சாட்டிலைட் ஏவும் பணியும் தோல்வி அடைந்துள்ளது.
சரி இதென்ன பெரிய விஷயம், 100 செலுத்தினால், ஒன்று இரண்டு தவறுவது, பெரிய விஷயமல்ல. இன்னமும் தொழில்நுட்பத்தில் நாம் வளர வேண்டியுள்ளது எனலாம். ஆனால் விஷயம் அதுவல்ல. சீனா மற்றும் பாரதம் இரண்டும் ஒரு விஷயத்தை பரிமாறிக் கொண்டன. அது,
1) தோல்வி அடைந்த எல்லா ராக்கெட்டுகளிலும் upper stage ignition எனச் சொல்லப்படும், விண்கலத்தினை பிரிக்கும் நேரத்திலேயே தோல்வி அடைந்தது என உறுதி படுத்தப் பட்டுள்ளது.
2) இரு நாட்டிலும் Surveillance மற்றும் ராணுவ உதவிக்காக செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் மட்டுமே தோல்வி அடைந்துள்ளன.
3) இதற்கு பிறகு கடந்த 8 வருடத்தில் நடந்தவைகளை ஆராய்ந்தபோது, அதிர்ச்சியான அந்த உண்மை, அனைத்துமே இரு நாட்டின் அல்லது வேறு நாட்டின் Surveillance ரேடார்களை செலுத்திய ராக்கெட்டுகளே தோல்வி அடைந்தன. மற்றபடி பருவநிலை ஆராய்ச்சி அல்லது வேறு வகையான ராக்கெட்டுகளில் இந்த பிரச்சினை ஏற்படவில்லை.
ஆக ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக இரு நாடுகளும் கருதுகின்றன. அது என்ன என்பது இன்னமும் உறுதிப் படுத்தப்படவில்லை என்றாலும், வல்லுனர்கள் சில கருத்துகளை முன் வைக்கின்றனர்.
- Chips, Sensors, Avionics போன்றவற்றை இரண்டு நாடுகளும் மேலை நாடுகளிடம் இருந்து வாங்குகின்றன. இதில் இந்த ராக்கெட்டுக்கு இது தேவை என ஆர்டர் செய்யப்படுவதால், சப்ளை செய்யும்போதே இவற்றில் ஏதேனும் சதி செய்யப் படுகிறதா?
- ராக்கெட் ஏவுதல் சாஃப்ட்வேர், ஃபர்ம்வேர் மூலம் கட்டுபடுத்தப் படுவதால், இதனை ஹாக் செய்ய ஏதும் வாய்ப்புள்ளதா?
- இந்த அமைப்புகளில் பணிபுரியும் எவரும் விலைக்கு வாங்கப்பட்டனரா? அல்லது வெளியிலிருந்து யாரும் ஊடுருவுகின்றனரா?
இதற்கான விடைகள் பொதுவெளியில் ஒருநாளும் வரப்போவதில்லை. ஆனால் இதுகுறித்து இரு நாடுகளும் சீரியசாக உள்ளன. குறிப்பாக பாரதத்தில் ஏற்கனவே நடந்தவைகளை உணர்ந்தால், இது புரியும்.
1966 - ஹோமி பாபா சென்ற விமானம் விபத்துக்குள்ளானது என்று சொன்னாலும், இதன் பின் சதி உள்ளதாக பல புத்தகங்கள் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளன.
1971 - ISROவை கட்டமைத்த விக்ரம் சாராபாய், மர்மமான முறையில், ஹோட்டல் அறையில் உயிரிழந்தார். ஹார்ட் அட்டாக் என்று சொன்னாலும் இவரது உடலை அடாப்ஸி செய்து விவரங்களை வெளியிட அன்றைய மத்திய அரசு மறுத்துவிட்டது.
1995-2010 ISROவில் இருந்து, அமெரிக்க பணிக்கு செல்ல மறுத்த, 684 சயின்டிஸ்டுகள் மர்மமான முறையில் இறந்தனர். இதில் 70% பேர் தற்கொலை செய்துள்ளனர்.
இதே கால கட்டத்தில் BARC- Baba Atomic Research Centre ஊழியர்கள், 500க்கும் மேற்பட்டவர்கள் கேன்சரால் இறந்ததாக அறிவித்ததை எதிர்த்து அவர்கள் குடும்பத்தினர் போராடினர்.
1994ல் பாரதத்தின் முக்கிய ஆராய்ச்சியான க்ரையோஜனிக் எஞ்சின் திட்டத்தை முன்னெடுத்து நடத்திய நம்பி நாராயணன், எதிரிகளுடன் தொடர்பில் இருந்தார் என கைது செய்யப்பட்டு, 2019 வரை போராடி எந்த குற்றமும் இழைக்கவில்லை என தீர்ப்பு பெற்றார்.
Oct 2025 ப்ரம்மோஸ் ஏவுகணை முக்கிய பொறுப்பில் இருந்த எஞ்சினியர் 30 வயது ஆகாஷ்தீப் குப்தா திடீரென மாரடைப்பால் இறந்தார் என மருத்துவமனை அறிவிக்க, அதனை எதிர்த்து ஒரு வழக்கு நடந்து கொண்டு உள்ளது.
இது மட்டுமல்ல, பாரதத்தில் பணிபுரிந்து, பின் வெளிநாடு சென்று பணியில் இருந்த சிலர், பாரத ஆராய்ச்சிக்காக வெளிநாடு சென்ற சிலர், எதற்கு எதிராகவோ குரல் எழுப்பி, மர்மமான முறையில் இறந்த லிஸ்டும் அதிகம்.
சுசிர் பாலாஜி, நிகில் சோமவான்சி, அதித்ய வர்மா, லோகநாதன் மகாலிங்கம், உமங் சிங், அபிஷ் சிவம், என எழுத இயலாத அளவுக்கு லிஸ்ட் உள்ளது.
இது தவிர சில BARC ஆய்வகங்களில் தீப்பிடிப்பது, மொஹாலி பஞ்சாப் செமிகண்டக்டர் ஆராய்ச்சி நிலையம் தீப்பிடித்தது, என தொடர்ந்து பாரதம் வளர்ச்சி அடையாமல் இருக்க தாக்குதல்கள் நடந்து கொண்டேதான் உள்ளன.
இதில் சம்மந்தப்பட்டது CIA என்றாலும் நிரூப்பிக்க இயலாது. உள்ளூரில் அவர்கள் பணத்துக்காக தேசதுரோகிகள் பலர் உள்ளனர் என்பதாலும், அவர்களுடைய நெட்வொர்க்கை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது என்பதும் உண்மை.
ஜெய்ஹிந்த்!
#👌அருமையான ஸ்டேட்டஸ் #📺வைரல் தகவல்🤩 #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #I ❤️🔥 Indian Army🦾 #🙏என் தேசப்பற்று