#😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #👉வாழ்க்கை பாடங்கள் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #🎬 சினிமா
5 சிறந்த காட்சிகள் அங்காடி தெரு படத்திலிருந்து
1. செல்வராணி வேலை போனாலும் பரவாயில்லை, வா பார்த்துக்கலாம்னு அவன்பா... வேலை இல்லைன்னா நான் எப்படி குடும்பத்தைக் காப்பாத்துவேன் அப்படின்னு காதலியத் தகாத வார்த்தை சொல்லி வார்த்தையாலயே கொன்றுவான். செல்வராணி இறந்ததுக்கப்புறம் அந்த கடை முன்னாடி அவளோட ரத்தம் அப்படியே காட்டுவாங்க. அங்கிருந்து ஒரு ஸ்மூத் ட்ரான்சிஷன் எடுத்து அடுத்த நாள் காலையில ஒரு பெரிய அழகான ரங்கோலி கோலம் இருக்கும். நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இறந்தாலும் பரவாயில்லை, அடுத்த நாள் நீயும் எல்லா மனிதர்களாலும் கடந்து போற ஒரு பக்கமாயிடுவே அப்படின்றத அந்த இடத்துல அவ்வளவு தெளிவா சொல்லியிருப்பாங்க...!!
2
செல்வராணியோட மரணம் லிங்குவ நடுங்க வைக்கும். கனிய அவன் கொஞ்சம் கொஞ்சமா அவாய்ட் பண்ணுவான். கனி எக்கச்சக்கமான வார்த்தைகள் விட்டதுக்கப்புறம் லிங்கு சொல்லுவான்... மாட்டிக்கிட்டா உன்ன வச்சு காப்பாத்த எங்கப்பனும் சொத்து சேர்த்து வைக்கல, மாப்பிள்ளைக்கு ஒரு லட்சம் சீர் செய்ய உங்கப்பனுக்கும் வக்கில்லைனு. அதானே ரியாலிட்டி?
3. பழிக்கு பழி அப்படின்ற மாதிரி லிங்குவும் கனி ஏலச்சீட்டு நடத்துறதை சொல்லி மாட்டிவிட்டரலாம்னு ஒரு அட்டெம்ப்ட் பண்ணுவான். கனி அழுதுகிட்டே வெளியில அடி வாங்கிட்டு வருவா. கனி சொல்லுவா... தொடக்கூடாத இடத்தைத் தொட்டு harassment பண்ணாலுமே பொறுத்துகிட்டேன் எல்லாமே இந்த வேலைக்காக தான் அப்படின்னு நம்மளையே உரைய வச்சிரும் கனியோட ஸ்டேட்மென்ட்...!!!
4. லிங்குவோட தங்கச்சி ஒரு தடவை தெரியாதவங்க கிட்ட அவங்க அண்ணன் வேலை செய்யுற கடையோட பேக் கேக்கப் போவா. அந்த பேக் அவளுக்கு கிடைச்சதும் எங்க அண்ணனே என் கூட இருக்கிற மாதிரி நினைச்சு ஒரு சிரிப்பு சிரிப்பா பாருங்க - மில்லியன் டாலர் ஸ்மைல். அப்படியே கட் பண்ணா இந்த பக்கம் கனியோட தங்கச்சி வயசுக்கு வந்துருவா. வேலை கொடுத்த அம்மா நாயைக் கட்டிப் போடுற இடத்துல அவளை உட்கார வைப்பாங்க வீட்டுக்கு தீட்டுனு சொல்லிட்டு. ஒரு கோவில்ல உள்ள வாமா இந்த கோவில் தீட்டு கிடையாதுன்னு சொல்லும்போது அந்தப் பொண்ணு சிரிக்கிற சிரிப்பு... அதுவும் மில்லியன் டாலர் ஸ்மைல்தான்...!!!
5. ஒரு காதல் வெளியில தெரிஞ்சுட்டா வேலையே போயிடும்னு நினைச்ச லிங்குவுக்கும், கனி கை, கால் போனதுக்கு அப்புறம் கூட நான் அவ கூட நிப்பேன்டா யாரு தயவும் எனக்கு வேணாம்னு கனிய கல்யாணம் பண்ணி அதே ஸ்ட்ரீட்ஸ்ல வாழ்ந்து காட்டுன லிங்குவுக்கும் எவ்வளவு வித்தியாசம். உனக்கு கை இல்லனாலும் பரவாயில்லை, கால் இல்லனாலும் பரவாயில்லை, நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை, உனக்கு கான்ஃபிடன்ஸ் இருந்தா போதும் இந்த ஊர்ல பிழைச்சுக்கலாம்."
அங்காடி தெரு 💔
,
ரூபன் ❤️❤️❤️❤️