#😋மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி🥙 பட்டாணி பனீர் கிரேவி
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி - 1/2 கப்
பனீர் - 150 கிராம்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கடலைமாவு - 1 டேபிள் ஸ்பூன்
கரம்மசாலாதூள் - 1/2 டீஸ்பூன்
வெல்லம் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மசாலா அரைக்க
வெங்காயம் - 1
பூண்டு பற்கள் - 6
இஞ்சி - சிறிது
முந்திரி - 7
தக்காளி - 2
செய்முறை
1. கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் முந்திரி சேர்த்து வதக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவும். பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அதை லேசாக பிரட்டி மிளகாய்தூள் மற்றும் தனியாத்தூள் சேர்த்து வறுத்து அரைத்த விழுதையும் சேர்த்து கைவிடாமல் வதக்கவும்.
3. மசாலா விழுது பாதியளவு வதங்கியதும் கடலைமாவு சேர்த்து கைவிடாமல் வதக்கவும். மசாலா விழுது நன்றாக சுருங்கி வரும் வரை வதங்கியதும் பச்சை பட்டாணி சேர்த்து சில நிமிடங்கள் பிரட்டி தேவையான அளவு உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கரம்மசாலாதூள் மற்றும் வெல்லம் சேர்த்து மூடிவைத்து வேகவிடவும்.
4. பச்சை பட்டாணி வெந்த பின் நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கலந்து கிரேவி லேசாக கொதித்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். சுவையான பச்சை பட்டாணி பனீர் மசாலா தயார்.