#😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #💑கணவன் மனைவி காதல்💞
உங்கள் துணை ஒருவரைப் பற்றி
"இந்த உறவு உனக்கு வேண்டாம், என்று சொன்னால், அதை வெறும் சொல்லாகப் பார்க்காதீர்கள், அது உங்கள் உறவைக் காக்க அவர் விடுக்கும் அபயக்குரல்...
உங்களுக்குச் சரியாகத் தோன்றும் ஒரு நட்பு அல்லது உறவு, உங்கள் துணையின் மனதில் ஏதோ ஒரு ரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஒரு ஆழமான காதலில், உங்கள் துணையின் மனநிம்மதியை விட உங்களுக்கு வேறு எதுவும் மேலானது அல்ல...
நீங்கள் இருவரும் ஒரு அழகான, சரியான காதலை வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஏதோ ஒரு #சைத்தான் நண்பன் என்ற பெயரிலோ அல்லது உறவு என்ற வேடத்திலோ உங்களுக்குள் நுழையக்கூடும்...
அவர் வெறும் நண்பர்தானே,
இதில் என்ன தவறு இருக்கிறது,
என்று நீங்கள் ஆயிரம் நியாயங்கள் பேசலாம். ஆனால், அந்த நபர் உங்கள் துணைக்கு விருப்பமானவர் இல்லை என்றால், அதற்காக உங்கள் துணையை நோகடிக்காதீர்கள்...
அவருடன் சண்டை போட்டு, அவரை மனரீதியாகக் காயப்படுத்தி,
எனக்கு அந்த நட்புதான் வேண்டும், அந்த உறவுதான் முக்கியம், என்று பிடிவாதம் பிடித்து உங்கள் உயிரான துணையைப் பிரியாதீர்கள்...
இறுதியில், அந்த இடையில் வந்த உறவு மெல்ல மெல்ல நச்சாக மாறி, உங்களை உங்கள் துணையிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்துவிடும். ஒரு அந்நியருக்காக உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் வரப்போகும் துணையின் மனதை உடைப்பது தற்கொலைக்குச் சமம்...
மீட்க முடியாத இழப்பும், ஆறாத வடுவாக மாறும்.
ஒருமுறை நம்பிக்கை உடைந்துவிட்டால், அதன் பிறகு நீங்கள் காலடியில் விழுந்து கதறினாலும், ரத்தம் சொட்டச் சொட்ட அழுதாலும், ஏன் உங்கள் உயிரையே மாய்த்துக்கொண்டாலும் கூட, இழந்த அந்தப் பழைய காதலையோ, அந்தத் துணையின் நம்பிக்கையையோ உங்களால் மீட்டெடுக்க முடியாது...
காயப்பட்ட இதயம் ஒரு கல்லாக மாறிவிடும். நீங்கள் எத்தனை வருடங்கள் போராடினாலும், எத்தனை தூது அனுப்பினாலும் அவர் உங்களை மன்னிக்கவும் மாட்டார், மீண்டும் அந்தப் பழைய இடத்தைத் தரவும் மாட்டார். காலங்காலமாகச் சேர்த்து வைத்த அன்பு, ஒரே ஒரு தவறான பிடிவாதத்தால் சாம்பலாகிவிடும்...
இருண்டு போகும் வாழ்க்கயின் வலியும் வேதனையும்
துணையை இழந்த பிறகுதான் நரக வாழ்க்கை தொடங்கும். தற்காலிகமான ஒரு உறவுக்காக உங்கள் #பொக்கிஷத்தை இழந்த அந்த நிமிடம் முதல் உங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் மறைந்துவிடும்...
தூக்கமில்லாத இரவுகளாக தலையணை நனையும் அளவுக்குக் கண்ணீர் விட்டாலும், உங்கள் துணையின் மடியில் கிடைத்த அந்த அமைதி மீண்டும் கிடைக்காது...
மனச்சோர்வும் தனிமையும் உங்களை நீங்களே அழித்து கொல்லு(ள்ளு)ம் அளவிற்கு சுற்றிலும் ஆயிரம் பேர் இருந்தாலும், உங்கள் துணையின் அந்த ஒரு இல்லாமை உங்களைத் தனிமைச் சிறையில் தள்ளும்...
உணவு இல்லாது,எதை உண்டாலும் இறங்காது, எதைப் பார்த்தாலும் அவர் நினைவே வந்து வாட்டும்...
முடிவில்லாத மன உழைச்சலுக்குள் உங்களை தள்ளும்,
அன்று அவர் பேச்சைக் கேட்டிருக்கலாமே என்ற குற்ற உணர்வு உங்கள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்...
வாழ்க்கையே ஒரு இருண்ட குகையாக மாறிவிடும். தனிமையும், வெறுமையும் உங்களைச் சூழ்ந்து, நீங்கள் வாழும் ஒவ்வொரு நொடியும் ஒரு மரண வேதனையைத் தரும்...
உங்கள் உறவை நேசியுங்கள், கொண்டாடுங்கள், முன்னுரிமை கொடுங்கள், இடையில் வந்தவர்கள் இடையில் போய்விடுவார்கள். ஆனால், கடைசி மூச்சு வரை கை கோர்த்து நிற்கப்போவது உங்கள் துணை மட்டுமே...
துணையின் உள்ளுணர்வை நம்புங்கள், உங்கள் துணை ஒருவரைப் பற்றி எச்சரிக்கிறார் என்றால், அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அதைச் சந்தேகமாகப் பார்க்காமல் அக்கறையாகப் பாருங்கள்...
பிடிவாதத்தைத் தவிருங்கள், ஒரு அந்நியருக்காக உங்கள் துணையை நோகடிப்பது, உங்கள உறவை நீங்களே தீ வைப்பதற்குச் சமம்...
இருக்கும் போதே பற்றிக்கொள்ளுங்கள்
யாரோ ஒரு அறிமுகமில்லாத அல்லது தற்காலிகமான உறவுக்காக, உங்கள் வாழ்வின் #பொக்கிஷமான அந்த உறவை இழந்துவிட்டு, இறுதி மூச்சு வரை நிம்மதி இழந்து நரக வாழ்க்கை வாழாதீர்கள்...
இழந்த பிறகு அழுவதில் பயமில்லை, இருக்கும் போதே அந்த அன்பைப் பற்றிக்கொள்ளுங்கள். அந்த இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்...
துணையை இழந்துவிட்டு இருளில் தவிப்பதை விட, துணையின் சொல்லுக்கு மதிப்பளித்து ஒளியோடு வாழ்வதே புத்திசாலித்தனம்...
மறுபடியும் சொல்கிறேன் நாணயதையும் சில்லறையையும் ஒரே அளவில் பார்க்காதீர்கள், சில சில்லறைக்காக உங்கள் நாணயத்தை #மாணிக்கத்தை தொலைத்து நிம்மதி இழந்து மரண படுக்கை வரைக்கும் செத்து மடியாதீர்கள்... ✍️
ரூபன் 🙏🙏🙏🙏