குளச்சல்: விசைப்படகில் வட மாநில தொழிலாளி சாவு
குளச்சல் துறைமுகத்தில் இருந்து 5 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜெகேஸ்வர் (46) என்பவர் சமையல் வேலை செய்யும்போது 6 ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்தார். அவரை கரைக்கு கொண்டு வந்த நிலையில், நேற்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் படகு கரை சேர்ந்ததும், மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது. இது குறித்து குளச்சல் மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்