ஓம்... நமசிவாய...🙏
மௌனத்தின் மத்தியில் முழங்கும் மந்திரமே;
மாயையின் மறைவில் மின்னும் சத்தியமே;
அண்டத்தின் இதயத் துடிப்பாய் திகழும் ஆதியே;
அருளால் உயிர்க்குள் ஒளிரும் ஆனந்த ஜோதியே... போற்றி... 🙏
கங்கை தரித்த சடையில் கருணை பெருக்காய்,
காலனை வென்ற கண்களில் கருணை விளக்காய்;
நீலக்கண்டா... நஞ்சை உட்கொண்டு எமைக் காத்தாய்,
நெஞ்சம் முழுதும் “நமசிவாய” என நாதம் கொண்டாய்...!
பூதநாதா பயமென்னும் இருள் அறுமே, நின்னாமம் உச்சரித்திடில்;
பொன்னான பாதம் நினைத்திடில் புண்ணியம் பெருகுமே...!
ஆதியும் அந்தமும் ஆனந்தம் ஆக்கிடும் ஈசா;
அன்பின் வழியில் நடத்தும் அப்பனே மகாதேவா... சரணம்...🙏
(एम् एम् नाडार)
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻