ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
570 views
தற்போது உள்ள பெண்கள் தங்களது திறமைகளை சமையலறையில் மட்டும் கழித்து விடாமல் வீட்டை தாண்டி சிறு தொழில்கள் மூலம் வருமானம் ஈட்டி ஆண்களுக்கு சமமாக முன்னேறி வருகின்றனர். அந்த வகையில் தான் மத்திய அரசு 'லக்பதி தீதி யோஜனா' என்ற திட்டத்தினை கொண்டு வந்ததுடன் பெண்களை பொருளாதார ரீதியாக ஆண்களுக்கு இணையாக மேம்படுத்தும் நோக்கில் ரூ.5 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் கொடுக்கிறது. வங்கிகளின் மூலம் பெறப்படும் கடன்கள் பொதுவாக அதிக வட்டி விகிதங்களுடன் கிடைக்கும் நிலையில், 'லக்பதி தீதி யோஜனா' திட்டத்தின் கீழ், முழு வட்டி செலவையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்வதால் வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறத்துடிக்கும் பெண்கள் தங்களுக்கு தெரிந்த தொழில்களை நிறுவவும், லாபம் ஈட்டவும் உதவுகிறது. பெண்கள் 'லக்பதி தீதி யோஜனா' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட சுய உதவிக் குழுவில் (SHG) இணைந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த திட்டம் சுய உதவிக் குழுக்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. பெண்களுக்கு மாதம் ரூ.1200 தரும் அரசு: யாருக்கெல்லாம் கிடைக்கும்..? விண்ணப்பிப்பது எப்படி ? 18 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும். அரசாங்கம் இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு கடனை வழங்குவதுடன் நின்றுவிடாமல் அவர்களுக்கு தொழில் வெற்றியடைய தேவையான பயிற்சியையும் வழங்குகிறது. மேலும், பெண்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தையில் விற்பனை செய்வதற்கும், தங்கள் தொழில்களை தொழில் ரீதியாக நடத்துவதற்கான உதவிகளையும் அரசாங்கம் செய்கிறது. பெண்கள் மத்திய அரசு வழங்கும் இந்த உதவியைப் பயன்படுத்திக்கொண்டு ஊறுகாய்-அப்பளம் தொழில்கள், கைவினைப்பொருட்கள், பால் உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், தையல், காளான் வளர்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை கொண்டு சிறுதொழில்களை தொடங்கி பொருளாதார நிலையில் முன்னேற முடியும். மேலும் நிதி பற்றாக்குறையால் சொந்தமாக தொழில் தொடங்க முடியாத பெண்களின் கனவுகளை இந்த திட்டம் நனவாக்குகிறது. விண்ணப்பிப்பது எப்படி? * கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தைப் பார்வையிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். * உள்ளூர் சுய உதவிக் குழு அலுவலகம், கிராமப்புற மேம்பாட்டுத் துறை அல்லது அருகிலுள்ள வங்கியில் ஆஃப்லைன் படிவங்களையும் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது, நீங்கள் தொடங்க விரும்பும் வணிக வகையை விவரிக்கும் ஒரு சுருக்கமான வேலைத் திட்டத்தை அலுவலகத்தில் சமர்பித்தால் போதுமானது. மகளிர் உரிமைத் தொகை உயர்கிறதா? தமிழக பெண்களுக்கு 'ஸ்வீட் நியூஸ்' சொன்ன அமைச்சர் ஐ.பெரியசாமி! மத்திய அரசின் 'லக்பதி தீதி யோஜனா' திட்டம் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி, அவர்களை பொருளாதார ரீதியில் நிலைநிறுத்தி சமூகத்தில் ஒரு முக்கிய அங்கமாக மாற்றும் என்பது நிச்சயம். பெண்களின் கனவுகளை நனவாக்கும் இந்த பொன்னான வாய்ப்பை பெண்கள் தவறவிடக்கூடாது. #📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠