It's...Me...Rk...
4.1K views
*வாழ்நாள் முழுதும் கேட்க வேண்டிய பாவ மன்னிப்பிற்கான ஒரு அருமையான துஆ* இந்த துஆவை கேட்கும் உங்களுக்கும் இதை எத்திவைத்த எனக்கும் எல்லாம் வல்லநல்லருள்புரிவானாக ஆமீன்..! *அவூதுபில்லாஹி மினஷ்ஷைதானிர்ரஜீம்..! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..!* அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர் வலில்லாகஹில் ஹம்து. அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யதினா வநபிய்யினா வஹபீபினா வஷபீஇனா வமவ்லானா முஹம்மதின் வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி வபாரிக் வஸல்லிம் அலைஹி..! யா அல்லாஹ்..! நாங்கள் என்ன புண்ணியம் செய்தோம் நீ எங்களை முஸ்லீமான ஆண், பெண்களுக்குப் பிறக்கச் செய்தாய்..! யா அல்லாஹ்..! நாங்கள் என்ன நன்மை செய்தோம் நீ எங்களை ஊனமில்லாமல் பிறக்கச் செய்தாய்..! யா அல்லாஹ்..! நாங்கள் பாவிகளாக இருந்தும் நீ எங்களுக்கு உணவளிக்கிறாய்..! யா அல்லாஹ்..! நாங்கள் தவறுகள் செய்பவர்களாக இருந்தும் நீ எங்கள் மீது இரக்கம் காட்டுகிறாய்..! யா அல்லாஹ்..! எங்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினராக வாழச்செய்திருக்கிறாய்..! யா அல்லாஹ்..! அதை விட மேலாக எங்களுக்கு மறுமையில் நீ சுவர்க்கத்ததை தயார் செய்து வைத்திருக்கிறாய்..! மேலும் சுவர்க்கத்தில் உன்னை எங்கள் கண்களால் தரிசிக்கக் கூடிய பாக்கியத்ததை வைத்திருக்கிறாய்..! யா அல்லாஹ்..! இதற்கெல்லாம் நாங்கள் வாழ் நாள் முழுதும் சஜ்தாவிலேயே மண்டியிட்டு கிடந்தாலும், உனக்கு நன்றி செலுத்த முடியாது ரஹ்மானே..! யா அல்லாஹ்..! உன்னை அறியாமல் வாழும் எங்களது சகோதர, சகோதரிகளுக்கு நீ நேர் வழி காட்டுவாயாக..! யா அல்லாஹ்..! நபி மூஸாவைக் காக்க கடலை பிளந்தவனே..! தொட்டிலில் குழந்தையாக இருந்த ஈஸா நபியைப் பேச வைத்தவனே..! மீனின் வயிற்றில் இருந்த யூனுஸ் நபியை தன் சக்தியால் காப்பாற்றியவனே..! கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அய்யூப் நபியை தன் கருணையினால் குணப்படுத்தியவனே..! எங்கள் இரட்சகனே..! மகத்தான உன்னுடைய பெயரால் கேட்கிறோம்..! துக்கம், கவலை, நெருக்கடி, வியாதி, இவை அனைத்தை விட்டும் எங்களை நீ காப்பாற்றுவாயாக..! எங்களுக்கு நேர்வழி காட்டி, நாங்கள் துயரடைந்தால் எங்களை நீ மகிழ்ச்சியுடையவர்களாக ஆக்குவாயாக..! யா அல்லாஹ்..! எங்களின் தேவைகளுக்கு உன்னை அல்லாமல் எவரிடத்தும் உதவி தேடும் நிலையில் எங்களை நீ விட்டு விடாதே..! நிச்சயமாக நீ எங்களால் தாங்க முடியாத சோதனைகளைக் கொடுக்க மாட்டாய் என நம்புகிறோம்..! எங்கள் வாழ்க்கையில் ஏற்படுகிற நற்பாக்கியங்களையும், துர்பாக்கியங்களையும் தன் கரத்தில் வைத்திருப்பவனே..! யா அல்லாஹ்..! இவ்வுலகமே ஒன்று சேர்த்து எங்களுக்கு நன்மை செய்ய நாடினாலும் எங்களுக்கென்று நீ எழுதியதைத் தவிர, எந்த நன்மையையும் எங்களுக்கு கிடைக்காது என்று நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்..! உலகமே ஒன்று சேர்ந்து எங்களுக்கு துன்பம் இழைக்க நினைத்தாலும், எங்களுக்கு எதிராக நீ விதித்தது மட்டுமே எங்களை அடையும் என்பதை நாங்கள் நம்புகிறோம்..! யா அல்லாஹ்..! உன்னை ஈமான் கொண்டு, உன் மார்கத்தைப் பின்பற்றுகிறார்கள் எனபதற்காக உலகின் பல பகுதிகளிலும் நிராகரிப்பையும், கொடுமைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கும் உன் அடியார்களுக்கு நீதி வழங்குவாயாக..! அவர்களின் அவல நிலையையின் மீது இரக்கம் காட்டாத அநீதியான ஆட்சியாளர்களுக்கு நீ ஹிதாயத்தைக் கொடுப்பாயாக..! யா அல்லாஹ்..! எங்கள் உள்ளத்தில் நிறைய தேவைகள் இருக்கின்றன..! உன்னிடத்தில் அல்லாமல் வேறு யாரிடத்தும் அதை சொல்ல முடியாது என் ரப்பே..! எங்களுடைய ரகசியங்களையும், எங்கள் ஆழ் மனதில் புதைந்து உள்ளவைகளையும் நீ மட்டுமே அறிவாய்..! "குன்"ஆகுக என்ற சொல்லின் மூலம் அகிலத்தைப் படைத்தவனே..! எங்களுடைய விருப்பங்களை நோக்கி "குன்" ஆகுக என்று சொல்லிவிடு என் ரப்பே..! யா அல்லாஹ்..! நீ எங்களுடன் இருப்பதால் எங்களுக்கு யாரிடத்தும் எந்த தேவையும் இல்லை என் ரப்பே..! நாங்கள் தவறான வழியில் செல்லும் போது நீ எங்களை நேரான வழியில் திருப்பி விடுவாயாக..! யா அல்லாஹ்..! எங்கள் அனைத்து பாவங்களையும், தவறுகளையும் மன்னித்து வாழுகின்ற காலமெல்லாம் ஈமானுடன் வாழ்ந்து, ஈமானுடனே மரணிக்கும் பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக..! எங்களை ஷஹீத் அந்தஸ்து பெற்றவர்களாக மரணிக்கச் செய்வாயாக..! கப்ருடைய வேதனையிலிருந்தும் நரக நெருப்பிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக..! இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு வெற்றியைத் தருவாயாக..! யா அல்லாஹ்..! சிறிய, பெரிய மற்றும் அனைத்து நோய்களை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக..! முதுமையிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக..! இறையச்சத்தையும், பேணுதலையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக..! யா அல்லாஹ்..! பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பிய வழியில், சுன்னத்தான முறையில் எங்களை வாழச் செய்வாயாக..! மறுமை நாளில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரையை பெரும் பேறு பெற்றவர்களாக எங்களை நீ ஆக்கி அருள்வாயாக...! மறுமை நாளில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் "லிவாவஉல் ஹம்து" என்னும் கொடியின் கீழ் நிற்கும் பாக்கியத்தையும், மேலும் அன்னாரின் "ஹவ்லுல் கௌதர்" நீர் தடாகத்திலே நீர் பருகும் பாக்கியத்தையும் எங்களுக்கு நீ தந்தருள்வாயாக..! யா அல்லாஹ்..! மரண வேதனையை விட்டும், மண்ணரை வேதனையை விட்டும் எங்களை நீ காப்பாற்றுவாயாக..! உன்னுடைய பிரியத்தை எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக..! முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்குகளை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக..! யா அல்லாஹ்..! கியாமத் நாளில் உன்னை நேரில் தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக..! யா அல்லாஹ்..! கியாமத் நாளின் இழிவுகளை விட்டும், வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும், எங்களையும், எங்கள் குடும்பத்தார்களையும், மூஃமீனான ஆண், பெண்கள் அனைவரையும் காப்பாற்றுவாயாக..! யா அல்லாஹ்..! கியாமத் நாளில் எங்கள் அமல்களின் பட்டோலையை வலது கரத்தில் பெரும் பாக்கியத்தைக் தந்தருள்வாயாக..! கியாமத் நாளில் உன் அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயாக..! எங்களை ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்திடுவாயாக..! யா அல்லாஹ்..! உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக..! யா அல்லாஹ்..! எங்களது தாய் தந்தையர்களின் பாவங்களை மன்னிப்பாயாக..! நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்த போது எங்களின் மீது அவர்கள் இரக்கம் காட்டியது போல் நீ அவர்கள் மீது இரக்கம் காட்டு ரஹ்மானே..! யா அல்லாஹ்..! உயிருடன் இருக்கின்ற எங்களின் பெற்றோர்களை எங்கள் மீது திருப்தி கொள்ளச் செய்வாயாக..! இறந்து விட்ட எங்கள் பெற்றோர்களின் கப்ருகளை விசாலமானதாக, ஒளி பொருந்தியதாக ஆக்குவாயாக..! எங்களின் பெற்றோர்களுக்கு "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்னும் உயர்ந்த சொர்க்கத்தைக் கொடுத்து அவர்களின் தரஜாக்களை உயர்த்துவாயாக..! யா அல்லாஹ்..! எங்களது கணவன், மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரிகள், உற்றார் உறவினர்கள், மற்றும் உலக முஃமின்கள் அனைவர்களின் பாவங்களையும் மன்னிப்பாயாக..! யா அல்லாஹ்..! நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, வேண்டுமென்றோ, திட்டமிட்டோ, மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ, சிறிதாகவோ, பெரிதாகவோ செய்த அனைத்துப் பாவங்களையும் உனது தனிப்பெரும் கருணையினால் மன்னித்து மேலும் பாவங்களை விட்டும் எங்களின் நஃப்ஸைப் பாதுகாப்பாயாக..! மறுமை நாளில் எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் ஒன்று சேர்ப்பாயாக..! யா அல்லாஹ்..! உள்ளங்களை புரட்டக் கூடியவனே..! எங்கள் உள்ளங்களை உன் மீது நிலைபெறச் செய்வாயாக..! இமைப்பொழுதும் விட்டுப் பிரிந்து நீ எங்களைத் தனிமைப்படுத்தி விடாதே..! நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்களது தேவைகள் அறிந்து நீ நிறைவேற்றுவாயாக..! யா அல்லாஹ்..! யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்யச் சொன்னார்களோ அவர்களின் ஹலாலான துஆக்களைக் நீ கபூல் செய்வாயாக...! யா அல்லாஹ்..! எங்களது சொல்லாலோ, செயலாலோ பிறர் மனதை நாங்கள் புண்படுத்தி இருந்தால் அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி விடுவாயாக..! யா அல்லாஹ்..! எங்களது உறவுகளை கொண்டோ, செல்வத்தை கொண்டோ எங்களை சோதித்து விடாதே..! யா அல்லாஹ்..! கியாமத் நாள் வரை வரவிருக்கிற எங்கள் சந்ததியினரை, மூஃமின்களாக வாழ்ந்து மூஃமின்களாகவே மரணிக்கக்கும் பாக்கியம் பெற்றவர்களாக ஆக்கி அருள்வாயாக...! யா அல்லாஹ்..! உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக...! உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத்தை வழங்குவாயாக..! எங்களுக்கும், எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக..! நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து எங்களது எதிரிகளைத் தோற்கடிப்பாயாக..! யா அல்லாஹ்..! எங்களை அனைத்து வித கஷ்டத்திலிருந்தும், வேதனையிலிருந்தும், விபத்துகளிலிருந்தும், விஷ ஜந்துக்களிடமிருந்தும், அபாயங்களிலிருந்தும், இயற்கை சீரழிவிலிருந்தும், ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும், வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும், வட்டியிலிருந்தும், பசியிலிருந்தும், பிணியிலிருந்தும், பலாய் முஸீபத்துகளிலிருந்தும், எதிர்பாராத மரணத்திலிருந்தும், கண் திருஷ்டியிலிருந்தும், எங்களைப் பாதுகாப்பாயாக..! யா அல்லாஹ்..! எங்களின் ரிஜ்க்கை விஸ்தீரணப்படுத்துவாயாக..! எங்களின் உணவு, உடை, இருப்பிடங்களை ஹலாலானவைகளாக ஆக்கித் தருவாயாக..! யா அல்லாஹ்..! எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக, பிரியமானவர்களாக மாற்றுவாயாக..! மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும், மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் நல் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக..! உலக முஃமின்கள் அனைவரையும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்பாயாக..! யா அல்லாஹ்..! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தை நீ எங்களுக்கு மறுமையில் ஏற்படுத்துவாயாக..! யா அல்லாஹ்..! கொள்ளை நோய், பைத்தியம், தொழுநோய் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தும் அனைத்து கொடிய நோய்களிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக..! எங்களுக்கு ஆஃபியாவை வழங்குவாயாக..! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் வாழ்நாளில் என்னென்ன துஆக்களை எல்லாம் உன்னிடம் கேட்டார்களோ அவைகள் அனைத்தையும் எங்களுக்கும் கபூல் செய்வாயாக..! யா அல்லாஹ்..! எங்களை சக்ராத் வேதனையிலிருந்தும், கப்ரின் அதாபிலிருந்தும், நரக நெருப்பில் இருந்தும் பாதுகாத்து, கேள்வி கணக்குகளை லேசாக்கி மறுமையில் *ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்* எனும் மேன்மையான சுவர்க்கத்தில் எங்களை நுழையச் செய்வாயாக..! என் ரப்பே, எங்களின் ஏந்திய கரங்களை வெறுங்கரங்களாக விட்டுவிடாதே..! எங்களது ஹலாலான துஆக்கள் அனைத்தையும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் நீ கபூல் செய்வாயாக..! *வஸல்லல்லாஹுத் தஆலா வஸல்லம் அலா ஹைரி ஹல்கிஹி ஸய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன் பிரஹ்மதிக யா அர்ஹமர் ராஹிமீன் வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.* .!🤲🏻🤲🏻🤲🏻😭😭😭🤲🏻🤲🏻🤲🏻🤲🏻 *இன்ஷாஅல்லாஹ் இந்த துஆவை அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுடனும் பகிரவும் # #🤲துஆக்கள்🕋 #அல்லாஹ் #ரமலான் #தொழுகை #துஆ #🤲இஸ்லாமிய துஆ