என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
சங்கீதம் 18:1
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
சங்கீதம் 18:2
துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன், அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.
சங்கீதம் 18:3
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
சங்கீதம் 18:4
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
சங்கீதம் 18:5
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன், தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
சங்கீதம் 18:6
அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
சங்கீதம் 18:7
அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.
சங்கீதம் 18:8
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார், அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
சங்கீதம் 18:9
கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார், காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்.
சங்கீதம் 18:10
இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார், கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக்கூடாரமாக்கினார்.
சங்கீதம் 18:11
அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
சங்கீதம் 18:12
கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார், கல் மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
சங்கீதம் 18:13
தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார், மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
சங்கீதம் 18:14
அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
சங்கீதம் 18:15
உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
சங்கீதம் 18:16
என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
சங்கீதம் 18:17
என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள், கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
சங்கீதம் 18:18
அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
சங்கீதம் 18:19
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார், என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
சங்கீதம் 18:20
கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன், நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
சங்கீதம் 18:21
அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன், அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
சங்கீதம் 18:22
அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
சங்கீதம் 18:23
ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.
சங்கீதம் 18:24
தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்.
சங்கீதம் 18:25
புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
சங்கீதம் 18:26
தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர், மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
சங்கீதம் 18:27
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர், என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
சங்கீதம் 18:28
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன், என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
சங்கீதம் 18:29
தேவனுடைய வழி உத்தமமானது, கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது, தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
சங்கீதம் 18:30
கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
சங்கீதம் 18:31
என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
சங்கீதம் 18:32
அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
சங்கீதம் 18:33
வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
சங்கீதம் 18:34
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர், உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது, உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
சங்கீதம் 18:35
என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
சங்கீதம் 18:36
என் சத்துருக்களைப் பின் தொடர்ந்து, அவர்களைப் பிடிப்பேன், அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.
சங்கீதம் 18:37
அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்.
சங்கீதம் 18:38
யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
சங்கீதம் 18:39
நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
சங்கீதம் 18:40
அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை, கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
சங்கீதம் 18:41
நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
சங்கீதம் 18:42
ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர், நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
சங்கீதம் 18:43
அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள், அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள்.
சங்கீதம் 18:44
அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
சங்கீதம் 18:45
கர்த்தர் ஜீவனுள்ளவர், என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக, என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.
சங்கீதம் 18:46
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
சங்கீதம் 18:47
அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
சங்கீதம் 18:48
இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
சங்கீதம் 18:49
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
சங்கீதம் 18:50
Shared from Tamil Bible 8.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
#✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
www.bible2all.com