ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
486 views
கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் பற்றி இளம்பெண்களுக்கு விழிப்பு உணர்வு ஏன்? கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் என்பது கருப்பைவாயில் உள்ள செல்களில் உருவாகும் புற்றுநோய். இதற்கு முக்கிய காரணம் ஹெச்பிவி (HPV - Human Papilloma Virus) என்னும் வைரஸ். பொதுவாக நடுத்தர வயது பெண்களிடம் அதிகம் காணப்படும் இந்த புற்றுநோய், 25 வயதுக்குட்பட்ட பெண்களிடமும் பார்க்கலாம். இதுஅரிதானது. அதேநேரம் ஒரேஇரவில் உருவாகும் நோயல்ல. நீண்ட காலம் உடலுக்குள் மெதுவாக வளர்ந்து பின்னர் வெளிப்படுவதால், இளம் பெண்கள் இதைப் பற்றி முன்கூட்டியேஅறிந்துகொள்வது மிகவும் அவசியம். கர்ப்பப்பைவாய் புற்றுநோய் எப்படி வருகிறது? சர்விகல் கேன்சர் பெரும்பாலும் ஆண்களிடமிருந்து பெண்களுக்குப் பரவும் HPV வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாயின் வெளிப்புற பகுதியில் 'ஸ்குவாமோகோலம்னர் சந்திப்பு' (Squamocolumnar Junction - SCJ) எனப்படும் பகுதி இருக்கும். இளம் வயதில் இந்த பகுதி கீழ்நிலையில் இருக்கும். அந்த நிலையில் பாலியல் உறவு ஏற்பட்டால், அந்த செல்கள் HPV வைரஸால் மெதுவாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பெண்கள் வளர வளர, சுமார் 21 வயதுக்குப் பிறகு இந்த SCJ பகுதி கர்ப்பப்பைவாயின் மேல்பகுதிக்குச் செல்லும். இளம் வயதில் பாலியல் உறவில் ஈடுபடும் பெண்களுக்கு, இந்த பகுதி பாதிக்கப்படுவதன் மூலம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால்தான், 9 முதல் 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு, முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கையாக HPV தடுப்பூசி போட மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். சர்விகல் கேன்சர் வராமல் தடுக்க முடியுமா? "இந்த நோயைகண்டிப்பாகத் தடுக்க முடியும். ஹெச்பிவி (HPV) வைரஸில் 16 மற்றும் 18 என்ற இரண்டு வகைகள் தான் கர்ப்பப்பைவாய் புற்றுநோயைஉருவாக்குகின்றன. இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைசெலுத்தினால், நோய் வருவதற்கான ஆபத்தைத் தவிர்க்கலாம். அதற்கான தடுப்பூசியும் தற்போது கிடைக்கிறது. இதனைஅடிப்படையாகக் கொண்டு, Indian Academy of Pediatrics - Immunization Schedule அமைப்பு பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியைபோட பரிந்துரைசெய்துள்ளது." யாருக்கெல்லாம் இந்த தடுப்பூசி தேவை? 9 வயது முதல் 14 வயது வரைஉள்ள பெண்குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போட வேண்டும்.போலியோ, டிப்தீரியா, டைஃபாய்டு போன்றவற்றைத் தடுப்பது போன்று இந்த கர்ப்பப்பைவாய் புற்றுநோயையும் தடுக்க முடியும்.15 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்பு உண்டு. 14 வயது கடந்த பெண்களுக்கு தடுப்பூசி போட முடியாதா? 9 முதல் 14 வயது வரைஉள்ள பெண் குழந்தைகளுக்கு இந்த HPV தடுப்பூசியைஇரண்டு டோஸ்களாக போட வேண்டும். 15 வயதைகடந்த பிறகு, 26 வயதிலும், ஏன் 40 வயதிலும் கூட இந்த தடுப்பூசியைபோட்டுக்கொள்ளலாம். அந்த வயதுகளில் இருப்பவர்களுக்கு 0 - 2 - 6 மாதங்கள் என்ற முறையில் மூன்று டோஸ்களாக தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? இந்த தடுப்பூசி பாதுகாப்பானது; குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் எதுவும் இல்லை. இது சுமார் 90 சதவீதம் வரைபுற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. சமீபத்தில் தமிழக அரசு 9 முதல் 14 வயது வரைஉள்ள பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியைஇலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. உண்மையில் இந்த தடுப்பூசி எல்லா பெண்களுக்கும் அவசியமானது. இந்த வயதில்தான் அவர்களுக்கு சர்விகல் கேன்சர் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைமிகவும் முக்கியம். தடுப்பூசி போடுங்கள் இல்லையெனில் புற்றுநோய் வரும் என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறதே? "இதில் பயம் தேவையில்லை; விழிப்புணர்வே முக்கியம். எப்படி போலியோவைதடுப்பூசி மூலம் ஒழித்தோமோ, அதேபோன்று சர்விகல் கேன்சரையும் முழுமையாகத் தடுக்க இந்த தடுப்பூசி அவசியம். மேலும், இந்த நோய் குறித்து நடுத்தர வயது பெண்கள் தெரிந்துகொண்டால் போதும் என்று நினைக்கக் கூடாது. சிறுவயது பெண் குழந்தைகளுக்கேஇதைப் பற்றி தெரிய வேண்டியது மிகவும் அவசியம். இளம் வயதிலேயேதடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு இருந்தால், எதிர்காலத்தில் இந்த புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்காது என்ற நம்பிக்கையைஇது உருவாக்குகிறது. இளம்பெண்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்த காரணம் என்ன? பெண் பிள்ளைகள் திருமணம் செய்துகொள்ளும் வயது என்பது மிக முக்கியமான காலகட்டம். இதுவேபாலியல் வாழ்க்கையில் நுழையும் வயது. அதனால்தான், இந்த காலத்திலேயேகர்ப்பப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வைமுதலில் அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். தடுப்பூசி மட்டுமல்ல, முன்கூட்டிய பரிசோதனையும் அவசியம். இளம்பெண்கள் 21 வயதிலிருந்தே சர்விகல் கேன்சர் ஸ்க்ரீனிங் தொடங்க வேண்டும். குறிப்பாக பாலியல் உறவில் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்கள் இந்த பரிசோதனையைதவறாமல் செய்து கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் 'பேப் ஸ்மியர்' (Pap Smear) எளிய மற்றும் பாதுகாப்பான பரிசோதனை. இதை HPV பரிசோதனையுடன் சேர்த்து செய்தால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்தால் போதும். மேலும் இவர்களுக்கு பரிசோதனை செய்யும் போது அவர்களின் அம்மா, பாட்டி போன்றவர்களும் வந்து பரிசோதனை செய்து கொள்வார்கள். சர்விகல் கேன்சர் ஒரேநாள் இரவில் வந்துவிடும் நோய் அல்ல. அதனால் இத்தகைய பரிசோதனைகளைஎல்லா வயது பெண்களும் செய்து கொள்வது பாதுகாப்பானது. சர்விகல் கேன்சர் பரிசோதனைசெய்ய வேண்டும் என்று உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? "ஒவ்வொரு முறையும் தாம்பத்திய உறவுக்குப் பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது, நிறம் மாறிய வெள்ளைப்படுதல் போன்ற அசாதாரண வெளியேற்றம், மாதவிடாய்க்கு இடையில் உதிரப்போக்கு, தாங்க முடியாத அளவுக்கு இடுப்பு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பரிசோதனைசெய்து கொள்வது அவசியம்." "கர்ப்பப்பைவாய் புற்றுநோயை முற்றிலும் தடுப்பதற்கான மூன்று முக்கிய கருவிகள்: தடுப்பூசி, முறையான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு. இவற்றை சரியாக பயன்படுத்தினால், இளம் பெண்களின் எதிர்காலத்தை பாதுகாக்கலாம்." #👩🏼‍⚕️ மகளிர் மருத்துவம் #பெண்களின் ஆரோக்கியம் ##😲அதிர்ச்சி - 83000 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு