S.ANTHONY✝️YESUMARY
1.2K views
6 hours ago
*இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.* 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 05.03.2026 *(வியாழன்)* *⚜️ஒளி நிறை மறையுண்மைகள்⚜️* *🌿🌹1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,* இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட எரேமியா நூலில், *"மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்."* என ஆண்டவர் கூறுகிறார். *"மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்."* *(தி.பா. 118: 8)* என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். எனவே, நாம் செல்வத்தின் மீதோ, மனிதர்கள் மீதோ அல்ல, மாறாக ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து நற்பேறு பெற்றவர்களாக வாழ இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,* *"ஆண்டவராகிய நானே இதயச் சிந்தனைகளை ஆய்பவர்; உள்ளுணர்வுகளைச் சோதித்து அறிபவர். ஒவ்வொருவரின் வழிகளுக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு நடத்துபவர்."* என முதல் வாசகம் எடுக்கப்பட்ட எரேமியா நூலில் ஆண்டவர் கூறுகிறார். ஒருவர் வெளிவேட நடிப்பில் மனிதர்களை ஏமாற்றலாம். ஆனால் ஒரு போதும் ஆண்டவரை அல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து* இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், நற்செய்தியில் இயேசு *‘செல்வரும் இலாசரும்’* என்ற உவமையைச் சொல்கின்றார். *"காசுக்கும் கடவுளுக்கும் ஒரேநேரத்தில் பணிவிடை செய்ய முடியாது." (மத். 6: 24)* என்ற இயேசுவின் இறை வார்த்தையை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🔔4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,* இந்த தவக்காலத்தில் நாம் செய்யும் செப தப முயற்சிகள் அனைத்தும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அமைய வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🌿🌹5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,* குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். *🙏🏻ஆமென்.🙏🏻* #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச்