பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட ராம்சார் பகுதி என்று அறிவித்தது திமுக அரசு.
ராம்சார் எல்லைகளை குறித்து அதை வெளியிட்டது திமுக அரசு.
ராம்சார் எல்லைக்குள் எந்த விதமான கட்டிடங்களும் கட்டப்படக் கூடாது என்று அறிவித்தது திமுக அரசு.
ராம்சார் எல்லைக்குள் 1250 குடியிருப்புகள் கட்ட Brigade Heights நிறுவனத்திற்கு கட்டிட அனுமதி கொடுத்ததும் அதே திமுக அரசு.
இந்த கட்டிட பணியை குறிப்பிட்டு தமிழ்நாட்டுக்கு 2000 கோடி முதலீடு வந்துள்ளது என்று அறிக்கை வெளியிட்டதும் அதே திமுக அரசு.
இப்போ புரியுதா இந்த அரசாங்கம் எப்படிப்பட்ட மோசடியான அரசாங்கம் என்று..! இந்த அரசாங்கத்தை நம்பி ராம்சார் எல்லைக்குள் கட்டப்படும் இந்த குடியிருப்புகளை திமுக நிர்வாகிகள் வாங்குவார்களா? இல்லை திமுக ஆதரவாளர்கள் தான் வாங்குவார்களா? கண்டிப்பாக வாங்க மாட்டார்கள். அப்போ மக்கள் வாங்கி ஏமாந்து போனால் பரவாயில்லையா? நாளை இந்த கட்டுமானத்தை உச்சநீதிமன்றம் மொத்தமாக அகற்ற சொன்னால் அந்த மக்கள் செய்த முதலீடுகளை திமுக மன்னரும் இளவரசரும் திருப்பி கொடுப்பார்களா?
இது தான் முதல்வர் ஸ்டாலின் சொல்லும் 1000 ஆண்டுகள் பேசக் கூடிய வேதனையா?
இந்த மோசடியை பற்றி ஒரு வார்த்தை பேசாமல் இருந்து விட்டு நாளை ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுக்க உங்கள் வீட்டுக்கு வரும் ஊழல் பெருச்சாளிகளிடம் "என் ஓட்டு விற்பனைக்கு அல்ல" என்று தெளிவாக சொல்லி விடுங்கள்.
உங்கள் பகுதியில் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்ய அறப்போருடன் இணையுங்கள். இந்த இணைப்பில் https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg பதிவு செய்யுங்கள்.
அறப்போர் இயக்கத்தின் பணிகள் முழுவதும் மக்களாகிய நீங்கள் கொடுக்கும் நன்கொடைகள் மூலம் தான் நடந்து வருகிறது. தொடர்ந்து ஆதரியுங்கள்.
நன்கொடை அளிக்க : https://donate.arappor.org/now/
Join Arappor Whatsapp Channel here https://whatsapp.com/channel/0029Va50GrUADTOLfyR35340
#🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #🙋♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #@அமானுஷ்யம்@( HORROR )