#Today Gospel
கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.
( 1 சாமுவேல் 2 : 7 )
எல்லா மனுஷர்கள் வாழ்க்கையிலும் குறைவுகள் வரும். கர்த்தரை இறுகப் பிடித்துக் கொள்பவன் சோதனையில் யோபுவைப் போல ஜெயிக்கிறான்!
"அவர் என்னைக் கொன்றுபோட்டாலும்
அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்;
( யோபு 13 : 15 )
ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
( பிரசங்கி 5 : 13 )
நம்மை பரலோகம் செல்லக் கூடாத படி அநேக சோதனையில் விழச் செய்யும். ஆதலால் தான் இயேசு தம்முடைய சீஷரை நோக்கி: "ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்."
( மாற்கு 10 : 23 )
வாலிபக் கன்னிகைகள் பணக்காரனை கரம் பிடிக்காமல் போவாஸ் போன்ற நீதிமான்களை ஏற்றுக் கொள்ளுங்கள்: "நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.
( ரூத் 3 :10 )
தேவனுக்குப் பயப்படுகிறவர்கள் எல்லா தீங்கிலும் காக்கப்படுவார்கள்.
( பிரசங்கி 7 : 18 ) என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
( பிலிப்பியர் 4 : 19 )
நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.
( நீதிமொழிகள் 30 : 9 )🙏🏻