இதே நாளில்தான்..!
சொத்துக் குவிப்பு வழக்கில் குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லும் என உச்சநீதிமன்றம் சொன்ன தினம் இன்று! எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு பெற்ற நாளும் இன்றுதான்! நீதிபதி குமாரசாமியின் கணக்கு பொய்த்துப் போனதும் இதே தேதிதான். பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்துக்குப் பிறகு சசிகலா முதல்வர் ஆக முடியாமல், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போனார். அதனால், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார்.
குன்ஹா தீர்ப்பு உயிர் பெற்றதால் சசிகலா முதல்வர் ஆக முடியாமல் சிறைக்குப் போனார். 9 ஆண்டுகளுக்கு முன்பு இவையெல்லாம் நடந்தது. அதற்கு விதையாய் இருந்தது 2014 செப்டம்பர் 27-ம் தேதி நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு. தன்னை முதல்வராக்கிய சசிகலாவை முதுகில் குத்திவிட்டு அவரை எதிர்த்து நிற்கிறார் எடப்பாடி. அரசர் காலங்களில் நடக்கும் அரண்மனை சதிகள் அரசியல் காலத்திலும் அரங்கேறின.
#😎வரலாற்றில் இன்று📰 #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு அரசியல் #அரசியல்