ஸ்ரீ (969)
#💵மகாலக்ஷ்மி மகாலட்சுமி துதி...
பொன்னொடு மின்னும்நவ ரத்தினமதை அணிகலனாக அணிந்தவளே! கண்ணொடு கருணைப் பார்வையொடு பக்தர்க்கருளும் திருமகளே! விண்ணொடு தேவரும் அரசருமே போற்றுகின்ற பேரரசியே! தண்ணொடு விளங்கும் நாரணன்துணை எனவந்தப் பெண்ணணங்கே!
எண்ணொடு எழுத்தாய்இருப் பவளும்முக் கண்ணொடுநின் றருள்பவளும் உன்னொடு முப்பெரும் தேவியராய் காட்சிதந் தருளிடுவரே! சங்கொடு உரசும்அலை நிறைந்த பாற்கடலுதித்த மகாலட்சுமியே! நன்னெறி கொண்டே வாழ்ந்திடவே அடியவர்க்கருளிடு நப்பின்னையே!
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி🙏