Newschannel39
587 views
3 days ago
"மதங்களைக் கடந்த மனிதநேயம்: பெந்தகோஸ்த் சபையில் அ.தி.மு.க-வின் நலத்திட்ட உதவிகள்" மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வழங்கினார்..!! சென்னை, மார்ச்.03:- மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி, 42,41 -வது வட்டத்திற்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை மற்றும் கொருக்குப்பேட்டை சி.பி.ரோடு பெந்தகோஸ்த் கிறிஸ்துவசபையில் அ.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், தலைமையில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு ஜெப வழிபாடு மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய சிறப்பு பிரார்த்தனை பாஸ்டர்: பாண்டுரங்கன், குமாரசாமுவேல், முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கிருஸ்துவ சபை ஊழியர்களுக்கு "அன்பு பரிசு பெட்டகமாக தலா 1 கிலோ அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை," உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நலத்திட்ட உதவிகளாக வழங்கினார். இதில் பகுதி செயலாளர்கள் எம்.என். சீனிவாசபாலாஜி, ஆர்.நித்தியானந்தம், வட்டக் கழக செயலாளர்கள் ஏ. வினாயகமூர்த்தி, எம்.சீனிவாசன், எல்.எஸ். மகேஷ்குமார், பகுதி துணை செயலாளர் லயன் ஈ.சண்முகவினாயகம், மற்றும் நிர்வாகிகள் எம். ஜெய்சங்கர், வீரா, தங்கதுரை, இந்திரகுமார், மற்றும் பாக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர். @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #🔷காங்கிரஸ் #✍️தமிழ் மன்றம் #📺அரசியல் 360🔴