*ஆன்ம உடல் நலம் பெற வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னையை நோக்கி மன்றாட்டு*
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #அன்னை மரியே வாழ்க💒💐 #சகாய மாதா #வேளாங்கண்ணி மாதா
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
கன்னி மரியே! ஆரோக்கிய அன்னையே! என் ஆண்டவளே! இறைவன் எனக்களித்த உண்மையான ஆறுதலே! இடுக்கண்களில் இளைப்பாற்றியளிக்கும் விண்ணகப் பத்தினியே! பாவ இருளில் அகப்பட்டுத் தவித்திடும் ஆன்மாவின் ஒளிச் சுடரே! திருப்பயணத்தில் வழிகாட்டியே! பலவீனத்தில் வலிமையே! ஏழைகளின் ஆறுதலே! நோயுற்றவர்களின் அரும் மருந்தே! பாவிகளின் தஞ்சமே! என் மீட்பின் நம்பிக்கையே!
எல்லையற்ற முறையில் அன்பு செய்யும் இறைவனுக்கு நீர் தாயானதால், உமது மேலான மகத்துவத்திற்கேற்ப என் மீது இரக்கம் காட்டியருளும். என் தேவைகளை எல்லாம் அறிந்துள்ள உம்மிடம் என் மன்றாட்டுக்களைச் சமர்ப்பிக்கிறேன்.
_(உங்கள் மன்றாட்டுக்களை இப்போது மௌனமாக நினைவு கூறவும்)_
விண்ணக மண்ணக அரசியே! கருணை நிறைந்த மாமரியே! பாவிகளின் தஞ்சமே! பாவக்கடலில் அமிழ்ந்தவர்களுக்குத் தெப்பமே! உலகத்திற்கெல்லாம் தயாபரியே! அடிமையானவர்களை மீட்கின்ற ஆண்டவளே! நோயாளிகளுக்கு ஆரோக்கியமே! உள்ளம் வேதனைப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! இவ்வுலக வாழ்வின் இருப்பிடமே!
தஞ்சமென்று நாடி வந்திருக்கும் என்னைப் புறக்கணியாது, நான் கேட்கின்ற சகாயத்தை அடைந்து தந்தருள உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை மன்றாடும் தாயே.
*ஆமென்.*
🫐🫐🫐🫐🫐🫐🫐🫐