#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
கற்பு!
கைப்பிடித்த கணவன் கை
விட்டு போனான்
புதுக் காதல் கொண்டு
காத்திருந்தாள் காரிகையவள்
காலம் மாறும் என்று
காத்திருப்பு பொய்க்கவில்லை
கறைப் படிந்த கணவனாய் மனம்
திருந்தி
அவள் மடம் திரும்பினான்
கவலைவிட்டாள் அவன் கறையை
பற்றி
மீண்டும் கரம் கோர்த்தாள்
காதலாள் கால் சிலம்பை கழட்டித் தந்தாள் புது வாழ்வுகென
கால் சிலம்பு தன் கதைமுடிக்கும்
என அறியாது
கடைத் தெருவுக்கு கனவோடு
போனான்
கறைபடிந்த கணவன் கைய்யில்
களங்கமில்லா
கண்ணகியின் கால் சிலம்பா
என நினைத்தது விதி
கற்புக்கரசி என்ற வார்த்தைக்கு
உயிர் தந்தது
அவள் எதிர்பாரா சதி