#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் 🙏இன்றைய சிந்தனை🙏
🌷29.01.2026🌷
🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩
உங்களைத் தள்ளி விட ஆயிரம் கைகள் வரும். ஆனால், உங்களைத் தாங்கிப் பிடித்துக் கொள்ள ஒரே ஒரு கை தான் வரும். அது உங்கள் தன்னம்பிக்கை மட்டுமே.
சொல்ல முடியாத சோகங்களும், நினைவுகளும் ஒவ்வொருவர் மனதிலும் உண்டு...
யாரும் மறந்து வாழ்வதில்லை. மறைத்துத் தான் வாழ்கிறோம்.
தேவைக்கு அதிகமாக நினைவுகளையும், கடனையும் சேர்த்து வைக்காதீர்கள். தூக்கத்தைப் பறி கொடுத்து விடுவீர்கள்.
வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட விதை கூட மரமாக வளர்ந்து வருகிறது. உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர் மத்தியில் இருந்து எழுந்து வாருங்கள்.
வாழ்க்கையில் பயத்தோடு வாழாமல் துணிவோடு வாழ்ந்து காட்டுங்கள். உங்களை வெல்ல யாரும் இல்லை.
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறந்து விடாதே.
வாழ்க வளமுடன்.
🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩