#😊எனது முதல் பதிவு🤙🏼 தலைப்பு: “அம்மாவின் கனவு”
அம்மாவுக்கு கனவுகள் இருந்தன…
ஆனால் அவை அவளுக்காக அல்ல…
அவள் பிள்ளைகளுக்காக.
வெயிலிலும் மழையிலும் வேலை பார்த்தாள்,
கைகளில் காயம் இருந்தாலும்
முகத்தில் புன்னகை மட்டும் மறையவில்லை.
“நீ படிச்சா போதும்”
என்ற ஒரே வார்த்தையில்
அவளுடைய வாழ்கை முழுவதும் அடங்கியது.
அன்று நான் பட்டம் வாங்கிய நாள்,
அவள் கண்களில் கண்ணீர்…
அது துன்பத்தின் கண்ணீர் அல்ல,
நிறைவேறிய கனவின் கண்ணீர்.
அம்மா கனவு கண்டது
தன்னை உயர்த்த அல்ல…
தன் பிள்ளைகளை உயர்த்த. 💖