Thangamani
396 views
2 days ago
கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். சங்கீதம் 122:1 எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று. சங்கீதம் 122:2 எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. சங்கீதம் 122:3 அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும். சங்கீதம் 122:4 அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. சங்கீதம் 122:5 எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள், உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. சங்கீதம் 122:6 உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. சங்கீதம் 122:7 என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன். சங்கீதம் 122:8 எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன். சங்கீதம் 122:9 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com