B. CELLIN
913 views
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்* "நற்பேறு பெற்றவர் யார்? அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்". (திருப்பாடல் 1: 1-4, 6) அன்பும், கனிவும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய நாளின் அதிகாலை வேளையில், உம்மை வணங்குகிறேன், வாழ்த்துகிறேன், ஆராதிக்கின்றேன், நன்றி செலுத்துகின்றேன். ஆண்டவரே! இந்த காலை வேளையில், உம் குரலுக்குச் செவிசாய்க்கிறேன். உம்மையே பற்றிக்கொள்கிறேன். ஏனெனில், நீரே எனது வாழ்வு; நீரே என் நீடிய வாழ்வு. தந்தையே! கடந்த காலங்களில், நான் பொல்லாரின் சொல்லின்படி நடந்து, இகழ்வோரின் குழுவினில் அமர்ந்திருந்த தருணங்களுக்காக, உம்மிடம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். ஆசியையும், சாபத்தையும் மக்கள் முன் வைத்த ஆண்டவரே! உம் கட்டளைகளை கடைப்பிடிப்பதன் மூலம், எங்களுக்கு உம் ஆசியை அளித்தருளும். "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்று கூறிய எம் இயேசுவே! ஒருவர் தன்னலம் துறந்து, சிலுவையைத் தூக்கிக் கொண்டு, உம்மைப் பின்பற்றுவது, அவர் தம்முடைய விருப்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கடவுளாகிய உமது கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வதற்கு இணையானவை. ஆண்டவரே! நாங்கள் அவ்வாறு வாழ்வதற்கு, இத்தவக்காலத்தில் எங்கள் உடலையும், உள்ளத்தையும் செம்மைப்படுத்தியருளும். இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணுலகில் இருக்கிற...(1) அருள் நிறைந்த...(3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.*