#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ #💑கணவன் மனைவி காதல்💞
உங்களுக்கு தேவையான ஒன்றை பற்றிப் பலமுறை விவாதித்தும், எதிர்முனையில் எந்த மாற்றமும் இல்லாதபோது, இனி நான் இல்லை என்று முடிவு எடுக்கும் அந்த நொடியில் தான் வாழ்க்கை மேம்படத் தொடங்குகிறது...
யாரோ ஒருவர் தொடர்ந்து உங்களை உடைத்துக்கொண்டே இருக்கும் போது , நாம் சரி செய்ய வேண்டும் என்கிற அந்தப் பதற்றம் நம்மை விட்டு நீங்கும் அந்தத் தருணம் மிகவும் அமைதியானது, ஐந்தாவது முறை பேசிய அதே விஷயத்தை, ஆறாவது முறை பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்று தோன்றும் போது வலிகளுடன் கலந்து ஒரு மாற்றம் நிகழ்கிறது...
அது நீங்கள் அவர்களை வெறுத்து விட்டீர்கள் என்றில்லை மாறாக அவர்களால் நீங்கள் வெறுக்கப்பட்டீர்கள் என்பதால்,
அல்லது உங்களுக்கு அன்பு இல்லை என்பதாலும் அல்ல, மாறாக, கசப்பான அந்த உண்மையை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள்,
அவர்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ, அதைத்தான் செய்வார்கள்...
கசப்பான உண்மை என்னவென்றால்,
யாரும் இந்த உண்மையை எதிர்கொள்ள விரும்புவதில்லை. நீங்கள் முதல் முறை சொன்னபோதே அவர்கள் அதைக் கேட்டார்கள், உங்கள் முகம் வாடியதைக் கவனித்தார்கள், அவர்களின் செயலால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் கண்டும், அந்த இழப்பு அவர்களுக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை...
பலமுறை பேசியும் ஒருவரது நடத்தை மாறவில்லை என்றால், அது மறதியோ அல்லது குழப்பமோ அல்ல, அது ஒரு முடிவு, உங்கள் நிம்மதியை விட அவர்களின் சந்தோசமே முக்கியம் என்று அவர்கள் எடுத்த தெளிவான முடிவு...
இதை நீங்கள் உணர்ந்துவிட்டால், எல்லாம் மாறிவிடும்,
அவர்களைப் புரிய வைக்க வேண்டும் என்று இனி நீங்கள் வார்த்தைகளைத் தேட மாட்டீர்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே எல்லாம் புரியும், ஆனால் உங்கள் கருத்தை ஏற்க அவர்களுக்கு விருப்பமில்லை...
அவர்களுக்குப் புரியும் வகையில் உங்கள் உண்மைகளை மென்மையாக்க மாட்டீர்கள்...
அவர்கள் பெற மறுக்கும் தெளிவுக்காக இனி நீங்கள் பொறுப்பேற்க மாட்டீர்கள்...
நீங்கள் மெதுவாக விலகிவிடுவீர்கள். எந்த அறிவிப்போ, விளக்கமோ இன்றி அமைதியாக ஒதுங்குவீர்கள், உங்கள் வார்த்தைகளைத் தொடர்ந்து அலட்சியம் செய்தவர்களுக்கு, உங்கள் கடைசி விளக்கத்தைப் தெரிந்துக்கொள்ள அவர்களுக்கு நேரமும், விருப்பமும் இல்லை...
உங்கள் மதிப்பைக் கண்டறிந்து கொள்ளுங்கள்,
உங்கள் தேவைகள் ஒருவருக்கு வசதியாக இல்லை என்பதற்காக, அதை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை, உங்கள் மன அமைதி விவாதத்திற்குரியது அல்ல..
ஒருவர் உங்களைத் தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறார் என்றால், அதுவே அவர்களிடமிருந்து உங்களுக்குக் கிடைத்த பதில், அந்தப் பதிலுக்கு மேல் பேசுவதற்கு எதுவுமே இல்லை தானே சிலருக்கு இதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இருந்தாலும் பிடிவாதம் ஒன்று வெளியே வர விடாது...
யாராவது அவர்கள் யார் என்பதை மீண்டும் மீண்டும் காட்டினால், அதை அப்படியே நம்புங்கள், அதற்கு ஏற்றார் போல் செயல்படுங்கள்...
உதாசீனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்... ✍️
ரூபன் ❤️❤️❤️❤️