மதுரையில் பிரம்மாண்ட அசைவ திருவிழா அனைத்து சமூக ஆண்களுக்கு மட்டும் அழைப்பிதழ்.
நாள் : 28/02/2026 சனிக்கிழமை.
பிரமலைக்கள்ளர் நாட்டில் உள்ள செரிக்காம்பட்டி கிராமத்தில் கரும்பாறை முத்தையா சுவாமி கோவில் வருடாந்திர பூஜை விழா
மதுரை மாவட்டம், செக்காணுரணி அருகே உள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு கரும்பாறை முத்தையா சுவாமி திருக்கோவிலில், வரும் விசுவாசு வருடம் மாசி மாதம் 16-ம் தேதி (28-02-2026), சனிக்கிழமை அன்று வருடாந்திர பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
விழா விவரங்கள்:
இந்த மங்கலகரமான திருவிழாவானது சனிக்கிழமை அதிகாலையிலேயே தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, கோவில் முன்பாக சமபந்தி பூஜை நடைபெற உள்ளது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அழைப்பு விடுத்தவர்கள்:
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சொரிக்காம்பட்டி மற்றும் S. பெருமாள்கோவில்பட்டி கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
"சுற்றுவட்டாரப் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இந்த விழாவில் தவறாது கலந்து கொண்டு, எல்லாம் வல்ல இறைவனின் அருளைப் பெற்றுச் சிறப்படையுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்."
#🙏கோவில் #🙏ஆன்மீகம்