நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
சங்கீதம் 109:1
துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது, கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள்.
சங்கீதம் 109:2
பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.
சங்கீதம் 109:3
என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
சங்கீதம் 109:4
நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
சங்கீதம் 109:5
அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.
சங்கீதம் 109:6
அவன் நியாயம் விசாரிக்கப்படும் போது குற்றவாளியாகக்கடவன், அவன் ஜெபம் பாவமாகக்கடவது.
சங்கீதம் 109:7
அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது, அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.
சங்கீதம் 109:8
அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.
சங்கீதம் 109:9
அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.
சங்கீதம் 109:10
கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக, அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.
சங்கீதம் 109:11
அவனுக்கு ஒருவரும் இரக்கங்காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக.
சங்கீதம் 109:12
அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.
சங்கீதம் 109:13
அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக.
சங்கீதம் 109:14
அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது, அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.
சங்கீதம் 109:15
அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
சங்கீதம் 109:16
சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும், அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.
சங்கீதம் 109:17
சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான், அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
சங்கீதம் 109:18
அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.
சங்கீதம் 109:19
இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும்பலன்.
சங்கீதம் 109:20
ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
சங்கீதம் 109:21
நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.
சங்கீதம் 109:22
சாயும் நிழலைப்போல் அகன்று போனேன், வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
சங்கீதம் 109:23
உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது, என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.
சங்கீதம் 109:24
நான் அவர்களுக்கு நிந்தையானேன், அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.
சங்கீதம் 109:25
என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும், உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.
சங்கீதம் 109:26
இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
சங்கீதம் 109:27
அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும், அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக, உமது அடியேனோ மகிழக்கடவன்.
சங்கீதம் 109:28
என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக் கொள்ளக்கடவர்கள்.
சங்கீதம் 109:29
கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
சங்கீதம் 109:30
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.
சங்கீதம் 109:31
Shared from Tamil Bible 8.5
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible
#✝பிரார்த்தனை #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
www.bible2all.com