போலி பேராசிரியர்களை கணக்கு காட்டி மோசடியாக அங்கீகாரம் வாங்கிய தனியார் பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் திமுக MLAக்கள் மற்றும் அமைச்சர்கள் கல்லூரிகளும் அடங்கும். இவர்களை காப்பாற்ற இந்த மோசடி விசாரணையை முடக்கி போட்ட தமிழக அரசு தற்பொழுது இந்த திமுகவினரின் கல்லூரிகள் தொடர்ந்து போலி பேராசிரியர்கள் மூலம் மோசடி செய்யும் வகையில் பேராசிரியர்கள் பட்டியலையே வெளியிடாமல் பதுக்கி வைத்துள்ளது.
இனி தனியார் பொறியியல் கல்லூரிகள், அவர்கள் கல்லூரி வாட்ச்மேனை கூட பேராசிரியர் என்று கணக்கு காட்டிக் கொள்ளலாம். யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஸ்டாலின் அரசின் இந்த சாதனையை கூட 1000 ஆண்டுகள் பேசுவார்கள்.
அண்ணா பல்கலைக்கழக வேந்தர் என்று ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் தனக்கு கொடுக்கப்பட்ட இந்த ஒரு வேலையை கூட ஒழுங்காக செய்ய முடியாமல் ஊருக்கெல்லாம் ஆலோசனை வழங்கிக் கொண்டு இருக்கிறார். ஒருவருக்கும் மாணவர்கள் கல்வித்தரம் குறித்த அக்கறை சிறிதும் இல்லை.
#@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #🙋♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ்