Babu Babuji
577 views
*எச்சரிக்கை:* *திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுகவின் அதிகாரிகள் போல , திமுகவின் உத்தரவுக்கேற்ப நடந்து தாங்கள் ஒரு அரசு அதிகாரி - மக்களுக்குப் பணியாற்றி , நீதி,சட்டம் ஆகியவற்றிற்கு அடி பணிந்து, அதைக் காப்பாற்றும் வேலை செய்ய வேண்டிய அதிகாரிகள் என்பதை மறந்து, நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அவமரியாதை செய்த அரசு அதிகாரிகளுக்கு - சிறைத்தண்டனை அளித்து - நீதிமன்றத்தின் மாண்பை மாண்பு மிகு நீதிமன்றம் நிலை நாட்ட வேண்டும்.* *அதற்குரிய அதிகாரமும், சட்டமும் நீதிமன்றத்திற்கு உள்ளது. இதை நீதிமன்ற அவமதிப்புச்சட்டம் 1971 ன் பிரிவு 12 வழங்குகிறது.* *எனவே இந்த அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை வழங்க வேண்டும். இது இனிவரும் அரசிற்கும், அதிகாரிகளுக்கும் ஒரு பாடமாக அமையும்.* *அவர்களை தண்டிக்காமல் மன்னித்து விட்டுவிட்டால் நீதிமன்றம் என்பதே கேலிக்கூத்தாக்கிவிடும். பிறகு இனிவரும் காலங்களில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தேவையில்லை.* *வழக்கு - பிரச்னை வந்தால், "மன்னிப்பு கேட்டால் போச்சு" என்ற தெனாவட்டான மனநிலையை அரசிற்கும், அதிகாரிகள் மத்தியிலும் இங்கு மட்டுமல்ல - நாடு முழுமைக்கும் - உண்டாக்கிவிடும். அது ஒரு மோசமான முன்னுதாரணமாகவும் ஆகிவிடும்.* *இது நாட்டிற்கும் நீதிக்கும் நல்லதல்ல.* #🔶பாஜக #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🙏என் தேசப்பற்று