ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
995 views
புத்தூரைச் சேர்ந்த பத்மா என்ற பெண், சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்தின் போது பல கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கிய பத்மாவிற்கு, அடுத்தடுத்த நிகழ்வுகள் பெரும் சோதனையாக அமைந்தன. அதாவது பத்மாவின் கணவர் கடந்த சில காலமாக வேலை இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் தொல்லை காரணமாகக் குடும்பத்தில் அடிக்கடி மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளன. வறுமையினாலும், கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியினாலும் மனம் உடைந்த பத்மா, தனது இரண்டு குழந்தைகளுடன் விபரீத முடிவை எடுத்துள்ளார். அவர் மறைவதற்கு முன் எழுதியுள்ள உருக்கமான வரிகளில், "பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்பவர்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம். நான் பட்ட கஷ்டங்கள் எனக்குத்தான் தெரியும்" எனத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். மேலும் இந்தத் துயரச் சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #📢பிப்ரவரி 8 முக்கிய தகவல் 🫠